கடும் பொருளாதார நெருக்கடி: லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடல்

பெய்ரூட், மேற்காசிய நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடுகின்றனர். லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்ததையடுத்து 2019-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டாலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஆதரவு

புதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. இந்த கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தமில்லா உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அதிபர் பைடன் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளார். மறுசீரமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா நிரந்தர … Read more

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: ஈரானில், ‘ஹிஜாப்’ அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில், 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள, மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கியை அணிவது கட்டாயமாகும். அவ்வாறு அணியாதவர்களை கண்காணிப்பதற்காகவே ஒழுக்க கண்காணிப்பு காவலர்கள் உள்ளனர். … Read more

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி – அதிர்ச்சி தகவல்

டெஹ்ரான், ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாஷா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் … Read more

மோடியின் பேச்சை கேளுங்க: ரஷ்யாவுக்கு பிரிட்டன் அறிவுரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ‘சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்’ என பிரிட்டன் கூறியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இந்நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர … Read more

இன்று சைகை மொழி தினம்| Dinamalar

உலகில் 7 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். மொத்தமாக இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே உலக காது கேளாதோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘சைகை மொழி நம்மை ஒருங்கிணைக்கிறது’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிபடுத்துவது ஆகும். … Read more

மோடியின் பேச்சை கேளுங்க ரஷ்யாவுக்கு பிரிட்டன் அறிவுரை| Dinamalar

நியூயார்க், :’சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்’ என, பிரிட்டன் கூறியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. இந்நிலையில், மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல’ … Read more

18 – 65 வயது வரையிலானோர் ரஷ்யாவை விட்டு வெளியேற தடை?

மாஸ்கோ:’ரஷ்யாவில், 18 – 65 வயது வரை உள்ளவர்கள் விமானம் மற்றும் ரயில்களில் நாட்டைவிட்டு வெளியேற பயணச்சீட்டு அளிக்கக் கூடாது’ என, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் போரை தீவிரப்படுத்தும் … Read more

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புபோராட்டத்தில் 31 பேர் பலி| Dinamalar

பாரிஸ் :ஈரானில், ‘ஹிஜாப்’ அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில், 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள, மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கியை அணிவது கட்டாயமாகும். தீவிரம் அவ்வாறு அணியாதவர்களை கண்காணிப்பதற்காகவே ஒழுக்க கண்காணிப்பு காவலர்கள் உள்ளனர். இவர்கள் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம், … Read more

மியான்மரில் சிக்கிய32 இந்தியர்கள் மீட்பு| Dinamalar

புதுடில்லி:தாய்லாந்தில் வேலைக்காக சென்று மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 90 இந்தியர்களில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளத்தில் போலி விளம்பரங்கள் வந்தன. இதை நம்பி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற 80 – 90 பேர், தாய்லாந்து எல்லையில் உள்ள மியான்மர் நாட்டின் மியாவாடி என்ற இடத்தில் சிக்கினர். இந்தப் பகுதி உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், … Read more