பாகிஸ்தானில் பலத்த மழையில் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பரவலாக நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டனர். பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் 2 பேர் பலியாகி உள்ளதை மீட்பு படையினர் உறுதிப்படுத்தினர். … Read more

இலங்கையில் வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அதிபர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், வரும் 30 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சராக இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பொருளாதாரத்தை சீரமைக்கும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டிற்கான … Read more

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தைஇறுதிச் சடங்கில் எழுந்ததால் அதிர்ச்சி| Dinamalar

வில்லா டி ராமோஸ் -மெக்ஸிகோவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, இறுதிச் சடங்கில் திடீரென எழுந்து, சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டும் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின், வில்லா டி ராமோசைச் சேர்ந்தவர் கமீலா ரொக்ஸானா. இவரது, 3 வயது குழந்தைக்கு, சமீபத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனாலும், … Read more

ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, 6 மாதங்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய இந்த போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள், வீரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. போரானது நீண்டு கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. உக்ரைன் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமிகள், பெண்களுக்கு ரஷிய … Read more

உக்ரைனுக்கு மேலும் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..!

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மேலும் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 9.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராணுவம், பட்ஜெட், மனிதாபிமான உதவிகள், சுகாதாரம் பராமரிப்பு, அவசர உதவி தொகுப்புகள் என நிதி பிரித்து ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  Source link

ஏவுகணை செலுத்தப்பட்ட விவகாரம்கூட்டு விசாரணை கேட்கிறது பாக்.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்,-‘இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்’ என, பாகிஸ்தான் கூறியுள்ளது. ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து, மார்ச் 9ம் தேதி, பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. இது, 124 கி.மீ., துாரம் பயணித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விழுந்தது. இது தொடர்பாக, பாக்., புகார் கூறியது. ‘இது தவறுதலாக நடந்த விபத்து’ … Read more

5 மாதங்களில் உலகை தன்னந்தனியே சுற்றி கின்னஸ் சாதனை படைத்த 17 வயது சிறுவன்..!

பல்கேரியாவை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னந்தனியாக சிறிய விமானத்தில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த மார்ச் 23ம் தேதி சிறிய விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சோஃபியாவை சேர்ந்த சிறுவன் மேக் ரூதர்ஃபோர்டு, 5 கண்டங்களில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 52 நாடுகளை கடந்து பயணித்துள்ளான். இந்த பயணத்தை முடிக்க 5 மாதங்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ள சிறுவன், தனது சாதனை தன்னை போன்ற சிறுவர்கள் சாதிப்பதற்கு ஊக்கமளிக்கும் என … Read more

ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா..!- மீண்டும் தொடங்கிய சிகிச்சை..!!

ஏற்கனவே கொரோனா தொடரிலிருந்து ஜில் பைடன் மீண்டு வந்துள்ள நிலையில், தற்பொழுது அவருக்கு மீண்டும் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிஉயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதன் 4வது அலையும் பரவி வருகிறது. இந்த நிலையில்,, உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று … Read more

கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் திடீரென்று உருவான சூறாவளி.!

போர்ச்சுக்கல்லில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் திடீரென்று சூறாவளி உருவானது. அதீத வெப்ப அலை காரணமாக அல்வாவ் இயற்கை பூங்காவில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில், 11 ஆயிரத்து 200 ஏக்கருக்கு மேல் பசுமை பகுதிகளில் எரிந்த நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் திடீரென உருவான சூறாவளி காட்சியை வீரர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். Source link

இறுதி சடங்கில் எழுந்த சிறுமி?; டாக்டர்களுக்கு வந்தது சிக்கல்!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் காமிலா ரோக்சானா மார்டினேஸ் (3). கடந்த சில தினங்களாக சிறுமி காமிலா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமிக்கு மாத்திரைகள் வழங்கியுள்ளனர். ஆனாலும் சிறுமி உடல் நிலை மோசமடைந்ததோடு சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக தீவிரமான … Read more