உக்ரைனில் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி ரஷ்யப் படைகள் பயங்கர தாக்குதல்..!

உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் உக்ரேனிய ஆயுதப் படைகள் தங்கிருப்பதாகக் கருதி ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யப் படைகள், பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு வளாகம் உள்ளிட்ட இடங்களில் … Read more

அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம்.!

அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான் நிக்கோலஸ் நகரைச் சுற்றிய நெடுஞ்சாலையில் திரண்ட லாரி ஒட்டுநர்கள் டயர்களுக்கு தீ வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால், அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர். … Read more

பூமிக்கடியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து.. அதிர்வில் தொழிலாளி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி.!

இங்கிலாந்தில் பூமிக்கடியில் உள்ள எரிவாயு குழாய் வெடித்ததில் தொழிலாளி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டெர்பிஷெயர் பகுதியில் வேலி அமைக்கும் பணியில் தொழிலாளி ஈடுபட்ட நிலையில், பயங்கர சத்தத்துடன் அவர் நின்ற இடத்தின் அடியில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதிர்வில் அவர் தூக்கி வீசப்பட்டார். பூமிக்கடியில் உள்ள எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டு நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு| Dinamalar

கயன்: ஆப்கானிஸ்தானில் கடந்த 22ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளை செய்ய முடியாமல் தலிபான்கள் திணறி வருவதால், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 22ல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள பாக்டிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில், ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பாக்டிகா மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இது, … Read more

பிரிட்டன் பிரதமர் பதவி விலக மறுப்பு| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவரும், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் நெருக்கமானவருமான அமைச்சர் ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். கொரோனா காலத்தில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியது, 40 ஆண்டுகளில் இல்லாத … Read more

மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த மின்சார கார்.. சம்பவ இடத்திலேயே இருவர் பலி.!

சீனாவில் மூன்றாவது மாடியிலிருந்து கார் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்தனர். மின்சார கார்களை தயாரிக்கும் நியோ நிறுவனத்தின் ஷோ ரூம், ஷாங்காயில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமையன்று ஷோ ரூமில் பயிற்சியில் இருந்த ஒரு கார் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் காரில் இருந்த பயிற்சி ஓட்டுநர் உள்பட இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  Source link

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதவிக்கு நெருக்கடி| Dinamalar

லண்டன் :பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்த நிலையில், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடப் போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இரு எம்.பி., தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவரும், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மிகவும் நெருக்கமானவருமான அமைச்சர் ஆலிவர் டவ்டன் பதவி விலகினார். கொரோனா காலத்தில் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியது, 40 ஆண்டுகளில் … Read more

பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருகிறது… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா புகார்

லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி திருமூர்த்தி, இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் சொர்க்க பூமியாக மாறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.  தாலிபான்கள் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். Source link

இந்தியாவில் தடுப்பூசியால் 42 லட்சம் மரணம் தடுப்பு| Dinamalar

லண்டன்:இந்தியாவில், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப் பட்டதால், இறக்க வாய்ப்பிருந்த, 42 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லுாரி பேராசிரியர் ஆலிவர் வாட்சன் தலைமையிலான குழு, கொரோனா இறப்பு பற்றிய ஆய்வறிக்கையை, ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா பரவலால், உலக நாடுகள் தெரிவித்ததை விட அதிகமானோர் இறந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு, ‘தி எக்கனாமிஸ்ட்’ இதழ் ஆகியவை தெரிவித்துள்ளன. அவற்றின் புள்ளி … Read more

ஃபுளோரிடா மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ள மிக அதிக எடையுடன் கூடிய பர்மீஸ் மலைப்பாம்பு..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எடையுடன் கூடிய ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண் மலைப்பாம்பு 98 கிலோ எடையும், 5 மீட்டர் நீளமும் கொண்டிருந்ததுடன், அதனுடன் 122 முட்டைகள் இருந்துள்ளன. வெஸ்டர்ன் எவர்கிளாட்ஸ் பகுதியில் டியோன் எனப்படும் பாம்பின் மீது ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி மலைப்பாம்புகளின் நகர்வுகள், இனப்பெருக்க முறைகள், வாழ்விடத்தை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டதில், இந்த ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு குறித்து உயிரியலாளர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த … Read more