பிரேசில் முன்னாள் அழகி 27 வயதில் மரணம்| Dinamalar

பிரேசிலியா : தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலின் முன்னாள்அழகி கிளேய்சி கார்ரியா 27, சமீபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்கநாடான பிரேசிலை சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018ல் நடந்த அழகி போட்டியில் பிரேசில் அழகி பட்டம் வென்றார். அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். அழகு கலை நிபுணராகவும் 56 ஆயிரம் பேர் பின் தொடரும் ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலமாகவும் உள்ளார். சில … Read more

ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?| Dinamalar

ரியோடிஜெனீரோ :ஒற்றைக் காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஸ்போர்ட்ஸ் மெடிசன்’ என்ற பத்திரிகை உடல் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பிரேசிலில், 50 வயதினரின் உடல் திடகாத்திரம் குறித்து, 1,702 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை, பிரேசில், அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்டனர்.இதில் பங்கேற்றவர்களிடம், கைகளை மேலே துாக்கி, ஒரு காலை … Read more

சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்திய வம்சாவளிக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, காதலியை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், பார்த்திபன். இந்திய வம்சாவளியான இவருக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் சிங்கப்பூர் வந்து அந்த பெண்ணுடன் இரண்டு மாதங்கள் வசித்துள்ளார். அதற்குள் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடித்து விட்டு, அந்தப் … Read more

இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு| Dinamalar

கொழும்பு:இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழு, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து, அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தத்தளித்து வருகிறது.’இலங்கை பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்து விட்டது’ என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பார்லி.,யில் அறிவித்தார். இந்நிலையில், நம் வெளியுறவு துறை செயலர் வினய் கவத்ரா தலைமையிலான குழு, … Read more

நிலநடுக்க மீட்பு நடவடிக்கை: திணறி தவிக்கும் ஆப்கன்| Dinamalar

கயன்:ஆப்கன் நிலநடுக்கத்தில்சிக்கியவர்களை மீட்க போதுமான இயந்திர வசதிகள் இல்லாததால், கைகளால் மண் குவியலை அகற்றி உள்ளே சிக்கியோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.தெற்காசிய நாடான ஆப்கனின் கோஸ்ட் நகரில், நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் அரசு ஒப்புதல் இங்கு, இறந்து போனவர்களின் உடல்களை மீட்கவும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுவோரை உடனடியாக காப்பாற்றவும் முடியாத நிலை உள்ளது. கிராம மக்கள் கைகளால் மண் … Read more

பயனர்களிடம் நன்கொடை கோரும் விக்கிப்பீடியா… பணம் செலுத்த ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம்..!!

வாஷிங்டன், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகிறது விக்கிப்பீடியா நிறுவனம். சமீப காலங்களாக தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா பயனர்களிடம் நன்கொடை கோரி வருகிறது. இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது. இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக … Read more

மரடோனா மரணத்தில் சர்ச்சை… விசாரணை வளையத்துக்குள் அவரின் குடும்ப மருத்துவர்!

உலக புகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரரான டியாகோ மரடோனா கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மரடோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணம் அர்ஜென்டினா நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அத்துடன் அவரின் மரணத்தில் சர்ச்சைகளும் நிலவி வந்தன. மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா … Read more

இலங்கை அதிபர் உடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு

கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் … Read more

Corona vs Unemployment: கொரோனாவினால் எதிர்காலம் இருண்டு போன சீன மாணவர்கள்

கோவிட், லாக்டவுன் மற்றும் வேலையின்மை என சீனாவில்  10.8 மில்லியன் பல்கலைக்கழக பட்டதாரிகளின் எதிர்காலமே இருண்டுவிட்டது.  சீனாவில் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனை தற்போது மிக அதிகமாக உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, “இளைஞர் வேலையின்மை ஏற்கனவே சீனாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, இது 18.4 சதவீதமாக உள்ளது”. போர்ச்சுகலின் மொத்த மக்கள்தொகையை விட சீனாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த  மாணவர்கள் அனைவரும் சீனாவின் வரலாற்றிலேயே வேலையின்மை என்ற … Read more

குரங்கு அம்மை நோய்; சர்வதேச அளவில் பொதுசுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

ஜெனீவா, உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக, இன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை … Read more