இலங்கை வன்முறை: போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க தயார்- முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தகவல்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராஜ பக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் முண்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சே, முன்னாள் மத்திரிகளின் வீடுகளுக்கு … Read more

ஐரோப்பாவில் மங்கிபாக்ஸ் பரவல் எதிரொலி: விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்தது இந்தியா

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே … Read more

பின்லாந்துக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா..!

பின்லாந்து நாட்டுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தி ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. பின்லாந்து அரசு உடைமையான Gasum எரிவாயு விநியோகத்திற்கான பணத்தை ரூபிளில் செலுத்த மறுத்துவிட்டது. மேலும் பின்லாந்து நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் நீடிக்கும் போதும் ரஷ்யா பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை தொடர்ந்து வருகிறது. ஆனால் பின்லாந்துக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. Source link

இந்திய வம்சாவளி மீது ரூ.9 கோடி மோசடி வழக்கு| Dinamalar

சிங்கப்பூர், மே 21-சிங்கப்பூரில், 9 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மீது, 21 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், முரளிதரன் முகுந்தன். இவர், ஊய் பாய்க் செங் என்ற சீன வம்சாவளி பெண்ணிடமும், மாரிமுத்து என்ற இந்திய வம்சாவளியிடமும் 9 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், முரளிதரன் முகுந்தன் மீது போலீசார், 21 குற்றப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த … Read more

Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் … Read more

ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்த பெண்.. ஆடையைப் போர்த்தி அழைத்து சென்ற அதிகாரிகள்.!

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரைன் கொடியின் வண்ணம் தீட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசிய அந்தப் பெண் உக்ரைன் வண்ணங்களுடன் அரை நிர்வாணமாக நின்றார். அவர் உடலில் கைகள் படருவது போல் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன. உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் … Read more

உக்ரைனில் கலாச்சார மையக் கட்டிடம் ஏவுகணை வீசி அழிப்பு… கட்டிடம் இடிந்து சின்னாபின்னமாகும் வீடியோ வெளியீடு.!

உக்ரைன் நாட்டின் Kharkivவில் Lozova பகுதியில் அமைந்துள்ள கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை ஏவுகணை மூலம் வெடிகுண்டு வீசி தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று உக்ரைன் நாட்டின் அவசர கால சேவை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கலாச்சார மையக் கட்டிடம் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டவுடன் அவை பயங்கரமாக வெடித்து சிதறுவதும் அங்கு அடர்த்தியான கரும்புகை அதிகளவில் வெளியாவதும் தெரிகிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. Source link

உலகிலேயே விலை உயர்ந்த கார்: ரூ. 1,100 கோடிக்கு ஏலம் போன மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர்

நியூயார்க்: உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த காராக மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் வெளிவந்த இந்த ஸ்போர்ட்ஸ் கார் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 14.30 கோடி டாலருக்கு (ரூ. 1,100 கோடி) ஏலம் போனது. பழைய கார்களில் மிக அதிக விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட காராக இது கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ரேசிங் பிரிவு உருவாக்கிய இரண்டு கார்களில் இது ஒன்றாகும். தலைமைப் பொறியாளர் ருடோல்ப் உஹ்லென்ஹாட் … Read more

இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்தமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாவதாகும். ஆகையால் மழை பெய்யும்போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண … Read more

திவால் நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை?- | Dinamalar

கொழும்பு:இலங்கை அரசு, முதன் முறையாக கூடுதல் அவகாசத்திற்குப் பின்னும் அன்னிய கடன் பத்திரங்களுக்கான வட்டித் தொகையை கூட திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், கொரோனா பரவலால் சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்டு அன்னியச் செலாவணி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதோடு, உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம், 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு … Read more