இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா – இருதுருவங்களாக பிரதமரும் அதிபரும்; ஒரு வாரத்திற்கு மசோதா ஒத்திவைப்பு!

கொழும்பு, இலங்கை சிக்கியிருக்கும் கடும் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, தொலைநோக்கு பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முக்கியமான ஒன்று, இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் 21வது சட்ட திருத்தம். இலங்கை அரசியலமைப்பின் 21வது சட்டத் திருத்தத்தின் முன்மொழியப்பட்ட வரைவு திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அமைச்சரவை ஒரு வாரத்திற்கு இதனை ஒத்திவைத்துள்ளது. முன்னதாக, 19வது சட்டத்திருத்தத்தை நீக்கிய … Read more

கிழக்கு உக்ரைனில் தீவிர போர்: கடும் சவாலான சூழலிலும் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம் – உக்ரைன் அதிபர் சபதம்!

கீவ், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தீவிர போர் மூண்டுள்ளது. உக்ரேனியப் படைகள் கிழக்கு நகரமான செவிரோடொனெட்ஸ்க்கில் ரஷியப் படைகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டதிலிருந்து, கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் உள்ள டான்பாஸ் பகுதியில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும், … Read more

“பாதுகாப்பான பள்ளிகள் வேண்டும்” – துப்பாக்கி வன்முறைகள் குறித்து வெள்ளை மாளிகையில் நடிகர் மேத்யூ மெக்கோனாஹே உருக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து பிரபல நடிகர் மேத்யூ மெக்கோனாஹே வெள்ளை மாளிகையில் உருக்கமான பேச்சை பதிவு செய்திருக்கிறார். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். அதன்பின், துப்பாக்கிச் சூடு நடந்த … Read more

சேட்டை செய்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்த ஒரங்குட்டான்- வைரலாகும் வீடியோ

ரியா இந்தோனேசியவை சேர்ந்தவர் ஹசன் அரிஃபின்( வயது 19) . இவர் ஜூன் 6 ஆம் தேதி இந்தோனேசியாவின் ரியாவில் உள்ள கசாங் குலிம் மிருகக்காட்சிசாலைக்கு சென்று உள்ளார். விலங்குகளை பார்வையிட்டு வந்த ஹசன் ஒரங்குட்டான் இருக்கும் கூண்டை பார்வயாளர்கள் தடுப்பை தாண்டி மேலே ஏறி உள்ளார். டினா என்ற ஒரங்குட்டான் குரங்குடன் அவர் விளையாடி உள்ளார். குரங்கு அவரது சட்டையை வசமாக பிடித்து கொண்டது . அவர் விடுபட முயற்சித்ததும் அவரது காலை பிடித்து கொண்டது. … Read more

ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்: அதிர்ச்சி ரிப்போர்ட்

டெஹ்ரான்: ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது ஈரான் அரசு. இந்தத் தண்டனை பற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ எதுவும் சொல்லாத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு Iran Human Rights (IHR) இத்ததகவலை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரும் ஈரானின் மதச் சிறுபான்மையினரான பாலுச் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.74 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 64 லட்சத்து 08 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே … Read more

திறப்பு விழாவின்போது புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது…!

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் மரக்கட்டை மற்றும் இரும்பு ஜெயினால் புதிதாக நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவுக்கு பின் அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் புதிய மேம்பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது, பாரம் தாங்காமல் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதில், மேம்பாலத்தின் மேல் நடந்து சென்றுகொண்டிருந்த … Read more

உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம்; சிக்கனமான நகரம்: பட்டியல் வெளியீடு

உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், சிக்கனமான நகரம் பட்டியல் வெளியாகியுள்ளது. மார்ச் 2021ன் ஆய்வின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இசிஏ இன்டர்நேஷனல் (ECA International) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி உலகிலேயே வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரமாக ஆசியாவின் ஹாங்காங் நகரம் தேர்வாகியுள்ளது. நியூயார்க் இரண்டாம் இடத்திலும் ஜெனீவா மூன்றாம் இடத்திலும் உள்ளன. லண்டன் மற்றும் டோக்கியோ முறையே 4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன. டாப் 5 காஸ்ட்லி நகரங்களில் லண்டனும், டோக்கியோவும் இடம்பெற … Read more

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை; முழு ஊதியம்: இங்கிலாந்தில் அமலாகும் சோதனை திட்டம்

லண்டன்: கரோனாவிற்கு பிறகு உலக அளவில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தொழில் , மருத்துவ துறைகளில் நாளும் மாற்றங்கள் நடந்தேறி கொண்டு வருகின்றன. அந்தவகையில், இங்கிலாந்தில் 4 நாட்களுக்கு மட்டும் வேலை செய்யும் சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை திட்டம் பிரிட்டன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 6 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சோதனையை ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ச் பல்கலைகழங்கள் & பாஸ்டன் கல்லூரி போன்றவை ஒருக்கிணைத்துள்ளன. முதற் கட்டமாக லண்டனை … Read more

USA vs North Korea: பேச்சுவார்த்தைக்கே வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது வடகொரியா: அமெரிக்கா

வட கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருந்தபோதிலும், அதை வடகொரியா புறக்கணிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் வட கொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் விரும்புவதாக பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூன் 7, செவ்வாய்கிழமை) கூறுகையில், பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் பல முறை முன்வந்தும், வட கொரியா  புறக்கணித்துள்ளது. கோவிட் பரவலில் உதவுவதற்கான அமெரிக்காவின் உதவியையும் தேவையில்லை … Read more