Nigeria Church Shooting: சர்ச்சில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – 50 பேர் உயிரிழப்பு!

நைஜீரியா நாட்டில், தேவாலயம் ஒன்றில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 50 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் … Read more

இலங்கையில் அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்? அதிபரின் அதிகாரங்களால் தான் பொருளாதார நெருக்கடி என புகார்..!

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதையடுத்து 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. Source … Read more

காபி இயந்திரத்தின் டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் – என்ன காரணம் தெரியுமா ?

வாஷிங்டன், இத்தாலி நாட்டின் துரின் பகுதியில் 1851ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பிறந்தவர் ஏஞ்சலோ மோரியோண்டோ. இவர் தொழில்முனைவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 19ம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியில் காபி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. அப்போது காபியை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனை உணர்ந்த மோரியோண்டோ மிகப்பெரிய பாய்லரை கொண்ட எஸ்பிரெசோ இயந்திரத்தை 1884ல் கண்டுபிடித்தார். இதனால் மக்கள் காபி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் … Read more

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி  கண்மூடித்தனமாக சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது துப்பாக்கி ஏந்திய நபர்  நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒண்டோ மாநிலத்தின் … Read more

Nupur Sharma: முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கருத்து: ஒன்று திரளும் அரபு நாடுகள்!

முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தோஹா, முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. சர்ச்சைக்குரிய … Read more

வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் அலுடியன் தீவுகளில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. Source link

தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு… குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு நைஜீரியாவின் ஓவோ நகரத்தில் உள்ள தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்மநபர்கள் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் உயிரிழந்தனர். செயின்ட் ஃபிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு புகுந்த மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடி பொருட்களையும் வெடிக்க செய்துவிட்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

அமெரிக்க அதிபர் பங்களா அருகே விமானம் பறந்ததால் பரபரப்பு| Dinamalar

ரெஹோபோத் பீச் : அமெரிக்க அதிபர் தங்கியிருந்த கடற்கரை பங்களாவுக்கு மேலே விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகிய இருவரும் உடனடியாக அந்த வீட்டில் இருந்து வெளியேறினர். அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர், வாஷிங்டன் நகரில் இருந்து 200 கி.மீ., துாரத்தில் ரெஹோபோத் கடற்கரையில் அமைந்துள்ள விடுமுறைக்கால ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்தனர்.நேற்று காலை … Read more

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய உள்ளதாக பாக்.அமைச்சர் அறிவிப்பு..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன்ஜாமீன் முடிவடைந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி பெஷாவர் நீதிமன்றம் இம்ரான் கானை கைது செய்ய 3 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து இம்ரான் கானின் சொந்த ஊரான பானி கல்லாவில் உள்ள இல்லத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். அவருடைய முன்ஜாமீன் முடியும் வரை போலீசார் அங்கு இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். … Read more

எரிமலை வெடிப்பு: பிலிப்பைன்சில் கடும் பீதி| Dinamalar

மணிலா : பிலிப்பைன்சில் எரிமலை வெடித்து அனல் காற்று மற்றும் சாம்பல் புகை வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துஉள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் சோர்சோகன் மாகாணத்தில் புலுசான் என்ற இடத்தில் உள்ள எரிமலை, ஆபத்து நிறைந்த எரிமலைகளின் பட்டியலில் உள்ளது. இந்த எரிமலையில் நேற்று காலை லேசான அதிர்வு ஏற்பட்டது. 15 நிமிடத்துக்கும் மேல் அதிர்ந்த இந்த எரிமலையில் இருந்து சாம்பல் துகள் மற்றும் அனல் காற்று வெளியேறியது. அருகில் உள்ள கிராமங்களில் எரிமலை … Read more