இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில், அவ்வவ்போது பல அவரது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது, இனிவரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என எலோன் மஸ்க் ட்வீட் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். சில பயனர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு சமூக ஊடக தளம் முற்றிலும் இலவசம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எலோன் மஸ்க் பதிவு செய்துள்ள ட்வீட்  டெஸ்லா … Read more

ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல்.!

ரஷ்ய அதிபர் புதின் தன் பொறுப்புகளை விட்டு விலகி புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு சென்றதாக அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஊக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் போரை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிபர் புதினின் உடல் நிலை குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன. அண்மையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoiguயுடனான கலந்துரையாடலின் போதும் மேஜையை இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி அவரது உடல் நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பின. ஏற்கனவே … Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு : இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கூட திண்டாட்டமாகி விட்டது. இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்கி உதவ இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 முதல் 7,500 வரை பண உதவி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு குறித்து இலங்கையின் வர்த்தகத்துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க கூறியிருப்பதாவது:- … Read more

ரஷ்ய படைகளின் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனை – தீயணைப்பு வீரர்கள் மீட்பு

உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், சேதமடைந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கீவ்வின் வடமேற்கே உள்ள போரோடியங்காவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, அந்த பூனைக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. Source link

மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல்

மேற்கு உக்ரைன் ரிவ்னே பிராந்தியத்தில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு மக்களுக்கு நேற்று நடத்திய தினசரி உரையில், மேற்கு ரிவ்னே பிராந்தியத்தில் பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் … Read more

செய்தியாளருக்கு அச்சுறுத்தல் 5-வது இடத்தில் பாகிஸ்தான்: செய்தியாளர்கள் கூட்டமைப்பு தகவல்

இஸ்லாமாபாத்: உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாகிஸ்தான் செய்தியாளர்கள் கூட்டமைப்பு (பிஎப்யுஜே) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச செய்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையின்படி செய்தியாளர்களுக்கு அநீதி இழைப்பதில் பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. கடந்த 1990முதல் 2020-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் 138 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையை எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் ஊடக துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. செய்தியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். … Read more

தாய்லாந்தில் 6.60 கோடி ஆண்டுகள் பழமையான உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

தாய்லாந்தில் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகள் முன் வாழ்ந்ததாக கூறப்படும் கடல்வாழ் உயிரினத்தின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாங்காக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அருகே நடைபாதையில் பொறிக்கப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட நத்தை வடிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள்ன. ஏறத்தாழ 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அம்மோனைட் என்ற கடல்வாழ் உயிரினத்தின் எச்சம் என்றும் டைனோசர்கள் வாழ்ந்த காலக் கட்டத்தில் அம்மோனைட்டும் வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  Source link

காரை ஓட்டி சேதப்படுத்திய 4-வயது சிறுவனுக்கு பொம்மை வாங்கி கொடுத்த போலீசார்

ஆம்ஸ்டெர்டாம் : நெதர்லாந்து நாட்டில் நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை எடுத்து யாருக்கும் தெரியாமல் காரை இயக்க முயன்றுள்ளான். அருகே இருந்த பிற கார்களையும் சேதப்படுத்தியுள்ளான். அப்போது காரின் ஆக்ஸ்லெட்டரை வேகமாக அழுத்தி காரை இயக்கியபோது கார் கட்டுப்பாடின்றிச் சென்று அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மோதியுள்ளது. இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அங்கு … Read more

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தாலியைச் சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருப்பதாகவும், இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பிய நிலையில், இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை எனவும் … Read more

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை இன்று சந்தித்து பேசுகிறார் மோடி

பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸை நேற்று முன்தினம் சந்தித்து வர்த்தக உறவுகள் குறித்து பேசினார். அதன்பின் ஜெர்மனி தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இந்தியர்களுடன் கலந்துரையாடல் பெர்லின் நகரில் 1,600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்ட … Read more