ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!

இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி  பகுதியில் பணியில் இருந்த காவல் துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கின் பல்வேறு … Read more

சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்

டோக்கியோ : ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. 10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் … Read more

போரை நிறுத்துங்கள்; உங்களுடன் ஓர் இரவை கழிக்கிறேன்: புடினிடம் கூறிய ஆபாச நடிகை

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த உலகளாவிய சக்திகள் பலவேறு வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், முன்னாள் ஆபாச நட்சத்திரம்  ஒருவர் புடினுக்கு புதுமையான ஒரு ஆபரை வழங்கியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து பல வகையில் முறையீடுகள் வைக்கப்படுகின்றன. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்தினால்,  அவருடன் ஒர் இரவைக் கழிக்க தான் தயார் என முன்னாள் ஆபாச நட்சத்திரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு … Read more

பாக். வெளியுறவு அமைச்சர் அமெரிக்க அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பாகிஸ்தானில் கடும் உணவுத் தட்டுப்பாடு குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல மடங்கு பெருகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது .இந்நிலையில் அமெரிக்காவுடன் அரசு ரீதியான உறவை மேம்படுத்தவும் பொருளாதார நட்பை வலுப்படுத்தவும் அந்நாட்டிற்கு பிலாவல் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை விமர்சித்துள்ள இம்ரான் கான், அமெரிக்காவிடம் பிச்சையெடுக்க பிலாவல் … Read more

வங்கதேசம்- இந்தியா நாடுகளுக்கு இடையே மீண்டும் ரெயில் சேவை

புது டெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் மார்ச் 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.  இந்த சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் குறைந்துள்ளதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரெயில் சேவை … Read more

Monkeypox | அமெரிக்காவில் உறுதியானது முதல் தொற்று: அறிகுறிகள் என்ன? – 10 தகவல்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு பதிவான முதல் தொற்று இது. மாசசஸ்ட்ஸ் நகரைச் சேர்ந்த அந்த நபர் ஏப்ரல் இறுதியில் கனடா சென்று திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அமெரிக்க நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. மங்கி பாக்ஸ் பற்றிய 10 தகவல்களை அறிவோம்: 1. 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடையே பரவிய இந்த நோய் மனிதர்களிடையே 1970 ஆம் ஆண்டு … Read more

மணல் புயல் பாதிப்பால் கண்ணுக்கு மறைந்த புரூஜ் காலிஃபா கட்டடம்

உலகின் மிகவும் உயரமான கட்டடமான புரூஜ் காலிஃபா மணல் புயலால் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மணல் புயல் வீசியது. அண்மையில் ஈராக், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலும் இது போன்ற மணல் புயல் வீசியது. நேற்று வீசிய மணல் சூறாவளிப் புயலால் புரூஜ் காலிஃபாவின் தோற்றம் மறைந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் பரவின. இதனிடையே அபுதானி நகரில் காற்று மாசு … Read more

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்: தலிபான்கள் உத்தரவு

காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் … Read more

தென் கொரியாவின் புளூ ஹவுசில் 74 ஆண்டுகளுக்கு பின் மக்கள் அனுமதி| Dinamalar

சியோல்: தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள, ‘புளூ ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அதிபர் மாளிகையை, 74 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக மக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டது. கிழக்காசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில், புளூ ஹவுஸ் என்றழைக்கப்படும் அதிபர் மாளிகை உள்ளது. இதன் கூரை ஓடுகள் நீல நிறத்தினால் அமைக்கப்பட்டதை அடுத்து இந்த மாளிகைக்கு புளு ஹவுஸ் என பெயரிடப்பட்டது. இதன் உள்ளே சென்று பார்வையிட, கடந்த 74 ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், … Read more

பெண்ணுக்கு டிப்ளமோ பட்டம் வழங்க மருத்துவமனைக்கு நேரில் சென்ற பல்கலை கழக அதிகாரிகள்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு டிப்ளமோ பட்டத்தினை பல்கலைக்கழகம் நேரில் சென்று வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   Dillard பல்கலைக் கழகத்தில் Jada Sayles என்ற இளம்பெண் டிப்ளமோ படிப்பினை நிறைவு செய்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா கடந்த 14ந்தேதி நடைபெற்றது. ஆனால் 13ந்தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  Jada Sayles பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. … Read more