சி.ஐ.ஏ., அதிகாரியானார் இந்திய வம்சாவளி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்த் முல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நகரமான சிலிகான் பள்ளத்தாக்கில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர் நந்த் முல்சந்தானி. இவர், அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப துறையிலும் பணியாற்றி உள்ளார். டில்லியில், 1979 – 87 வரை பள்ளியில் படித்த நந்த் முல்சந்தானி, பின்னர் அமெரிக்கா சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் … Read more

அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளிக் காற்றால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைந்து சேதம்.!

அமெரிக்கா கான்சாஸ் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளிக் காற்று நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உருக்குலைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. ஆண்டோவர் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய சுறாவளிக் காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையால் இருளில் மூழ்கினர். மேலும் சுறாவாளிக் காற்றில் வீடுகள் உருக்குலைந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். சுழன்றடித்த காற்று குப்பைக் கூளங்களை சுழட்டி வாரி எடுத்துக் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி … Read more

பொது முடக்கம், கட்டுப்பாடுகளால் சீன மக்கள் அவதி

பீஜிங் : உலகுக்கு கொரோனாவை வாரி வழங்கிய சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தத்தளிக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் அங்கு புதிதாக 7,872 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. ஷாங்காய்க்கு வெளியே சீனாவின் பிரதான பகுதிகளில் 384 பேருக்கு … Read more

ஒமைக்ரான் வகைகளால் புதிய அலை? ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோகனஸ்பர்க் : ‘ஒமைக்ரான் வைரசின் மரபணு மாறிய இரண்டு வகை வைரஸ்கள், புதிய அலைக்கு வழிவகுக்ககூடும்’ என, தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு உருவான ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.அதனால் உலகம் முழுதும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின், ஒமைக்ரானின் மரபணு மாறிய புதிய வகை வைரஸ்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. கடந்த மாதம் ஒமைக்ரானில் இருந்து பி.ஏ., … Read more

பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து.!

பாகிஸ்தானின் நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25க்கும் மேற்பட்ட ஆயில்டேங்கர் லாரிகள் சேதமடைந்தன. தருஜாபா கிடங்கில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரிகளுக்கும் தீ பரவியது. இதைத் தொடர்ந்து, பெரும் தீப்பிடித்ததில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில், அந்த 25 டேங்கர் லாரிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து … Read more

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு

கொழும்பு   இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை அரசு நாடி வருகிறது. அதேநேரம் தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காண வழி தெரியாத ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என புத்த மத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இடைக்கால அரசு அமைக்காவிட்டால் இலங்கை … Read more

சீனாவில் பொலிவு இழந்த மே தின விடுமுறை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் மே தின விடுமுறை கொண்டாட்டம் பொலிவு இழந்தது. நம் அண்டை நாடானா சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஷாங்காய் பீஜிங் நகரங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் மே தினத்தை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை நாட்களில் சீன மக்கள் சுற்றுலா செல்வர். ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க சீனாவில் கட்டுப்பாடுகள் … Read more

உணவு திருவிழாவில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்… ஒருவர் பலி – 5 பேர் காயம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் புகுந்த மர்மநபர் ஒருவன் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஜாக்சன் நகரில் ஆண்டுதோறும் மட்பக் என்ற பெயரில் நடைபெறும் உணவு திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என தகவல்

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் கோத்தபயவுடனான சந்திப்பிக்கு பின் பேசிய மகிந்த ராஜபக்சே, 20வது சட்டத் திருத்தத்தின் படி நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபருக்கு உரிமை உள்ளதாகவும், அப்படி அதிபர் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த வாரம் பிரதமரை நீக்கி இடைக்கால அரசை அமைக்குமாறு அதிபரை சந்தித்து எதிர்கட்சிகள் தெரிவித்த நிலையில், வரும் நாட்களில் இலங்கை அரசியலில் … Read more

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்

சிகாகோ  அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி உள்ளன. இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு கில்பாட்ரிக் பகுதியில் வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதேபோல்  பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  மொத்தம் … Read more