இலங்கைக்கு 3,300 கிலோமருந்துகள் அனுப்பி வைப்பு| Dinamalar

கொழும்பு:இந்தியா, இலங்கையின் ‘சுவா செரியா ஆம்புலன்ஸ்’ சேவை நிறுவனத்திற்கு, 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.கடந்த, 2016ல் இந்தியா வழங்கிய 58 கோடி ரூபாய் நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது.இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது, மருந்துகள் பற்றாக்குறை … Read more

பங்குகளை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்து விட்டதாக டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு.!

பங்குகளை எலான் மஸ்க் வாங்கும் ஒப்பந்தத்திற்கான காத்திருப்பு காலம் முடிவடைந்து விட்டதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4400 கோடி டாலர் விலைக்கு வாங்க டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். பின்னர்,போலி டுவிட்டர் பயனர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை பெறுவது தாமதமாவதாக கூறி தற்காலிகமாக ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக எலான்மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் எலான் மஸ்கிற்கான காத்திருப்பு காலம் சட்டப்படி முடிந்து விட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி ஒப்பந்தத்தை முடிப்பது … Read more

ஆங்கில உச்சரிப்பு போட்டியில் ரூ 38.8 லட்சம் பரிசு வென்ற இந்திய வம்சாவளி மாணவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி இந்திய மதிப்பில் ரூ 38 லட்சம் பரிசு வென்றார். அமெரிக்காவில் ‛ஸ்பெல் பி’ என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்துகிறது. இந்த வருடம்,2022ல், நடந்த போட்டியில் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி, ஹரிணி லோகன், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ‛ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பி’ என்ற பட்டத்தையும், … Read more

Australia Cabinet: ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றில் முதல் முறையாக..!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி (மே 21) பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை அதிரடியாக வீழ்த்தி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார். அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்கள் 30 பேருக்கு கவர்னர் … Read more

பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற உதவும் ‛சூப்பர் நாய்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாண்டியாகோ: சிலி நாட்டின் தலைகரில் உள்ள பூங்கா ஒன்றில் சேரும் குப்பைகளை வளர்ப்பு நாய் ஒன்று அகற்ற உதவுகிறது. பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்று செல்லமாக அழைக்கின்றனர். சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பூங்காவிற்கு நடை பயிற்சிக்காக வருபவர், கோன்சலோ சியாங். அவர் தன்னுடைய வளர்ப்பு நாயை கூட அழைத்து வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். ‛சாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஐந்தரை வயது நாய் … Read more

அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம்

அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட இளஞ் சிறார்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளார் ஆஷிஷ் ஜா, பெடரல் கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறுத்து அடுத்த வாரம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெளிப்புற உறுப்பினர்கள் குழு கூடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். … Read more

சிலி நாட்டில் பூங்காவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நாய்.!

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் உள்ள பூங்காவில்  நாய் ஒன்று, பிளாஸ்டிக்  குப்பைகளை அகற்ற உதவி வருகிறது. சாம் என பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தரை வயதான அந்த நாயை, அதன் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடைபயிற்சிக்காக தினமும் அழைத்து வருகிறார். அப்போது அந்த நாய் பூங்காவில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், முகமூடிகள், கேன்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்றழைக்கின்றனர்.   Source link

மிருக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு அஞ்சலி செலுத்திய விலங்குகள் நல ஆர்வலர்கள்.!

பொலிவியாவின் லா பாஸில் உள்ள நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தினர். மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் இறந்திருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மிருகக்காட்சி சாலை அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் உயிரிழந்த விலங்குகள், வெளியில் இருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட போதே பலவீனமாக இருந்ததாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source … Read more

இங்கிலாந்தில் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.!

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கியுள்ளனர். இது குறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் குழு, மூளையில் இருந்து வரும் தரவுகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான எலக்ட்ரானிக் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும் என்றும் மனித உடலில் உள்ள உணர்ச்சி நியூரான்கள் செயல்படும் விதத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். Source link

உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் – ஒருவர் பலி..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கார்கிவ் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய ராட்சத ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உக்ரைன் மீதான தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில், தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கார்கிவ் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்திய தாக்குதலில் பள்ளிக் கட்டிடம் இடிந்து நொறுங்கி தரை மட்டமானது. Source link