வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை; இந்தியாவின் முடிவுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்!

ஸ்டட்கார்ட்(ஜெர்மனி), கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கவும், கோதுமையை வாங்கும் தனியார் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, கோதுமை ஏற்றுமதியை தடை செய்திருப்பது, உக்ரைன் போர் காரணமாக விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.  … Read more

பணியிடங்களில் ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்- இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம்

இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 24 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த டோனி பின் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் இங்கிலாந்தின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில் தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி தன்னை வழுக்கை என்று கேலி செய்ததாகவும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்த … Read more

எமிரேட்ஸ் அதிபராகஷேக் முகமது நியமனம்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் அல் நஹ்யான் நியமிக்கப்பட்டு உள்ளார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சயீத், 73, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, எமிரேட்சின் ஆட்சிக் குழு கூட்டம், அபுதாபி அரண்மனையில் நேற்று நடந்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 61, தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் அபுதாபியின் மன்னராகவும் பொறுப்பேற்றார். … Read more

சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பனியாஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து … Read more

இலங்கை: ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக பதவியேற்று இரண்டு நாள் கழித்து அவரின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும், 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு … Read more

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றது முதல் அந்த நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் என உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. ஆனால் அதை மறுக்கும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்தையும் அனுமதிக்கமாட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மசூதியில் குண்டு வெடித்தது குறிப்பாக ஷியா பிரிவு … Read more

ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும்: முன்னாள் ரஷிய அதிபர்

மாஸ்கோ, ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதார தடையினால் ஏற்படும் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று முன்னாள் ரஷிய  அதிபர் தெரிவித்தார்.  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையால், ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் பரந்த அளவிலான உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் ரஷிய  அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்தார். ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை தாக்கி வசைபாடினார். டெலிகிராம் சேனல் வாயிலாக … Read more