இலங்கையில் வாட் வரி, வருமான வரி உயர்வு: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் வாட் வரி, வருமான வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை … Read more

Monkeypox: குரங்கம்மை அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ள கூடாது!

குரங்கம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள், உடலுறவு கொள்ளக் கூடாது என, பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்றைத் தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் மக்களை மிரட்டி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக … Read more

எட்னா எரிமலையில் இருந்து ஆறாக ஓடும் நெருப்பு குழம்புகள்..!

இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் ஆறாக பாய்ந்தோடி வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. எரிமலையில் ஏற்பட்ட சீற்றத்தை அடுத்து முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும் சாம்பலும் பாய்ந்தோடி வருகிறது. Source link

ரஷியா தீவிர தாக்குதல்: உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்பு விநியோகம்- அமெரிக்க அதிபர் தகவல்

வாஷிங்டன், ஜூன். 1- உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதன் மூலம் ரஷிய படைகளுக்கு உக்ரைன் … Read more

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடும் பனிப்பொழிவு.. பனிச்சறுக்கு விளையாடி மகிழும் ஆஸ்திரேலியர்கள்!

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் பனிபடர்ந்து வெண்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. வரும் நாட்களில் பனிப்பொழிவு இன்னும் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய மக்கள் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கின்றனர். Source link

பாகிஸ்தானில் நெய், சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு..!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எண்ணெய் மற்றும் நெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 213 ரூபாய் உயர்ந்து 605 ரூபாய்க்கும், நெய் விலை கிலோவுக்கு 208 ரூபாய் உயர்ந்து 555 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  Source link

உக்ரைனின் செவரோடொனட்ஸ்க் நகர ரசாயன ஆலை மீது ரஷ்யா தாக்குதல்.!

உக்ரைன் நாட்டின் செவரோ-டொனெட்ஸ்க் நகரில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் வான் தாக்குதல் நிகழ்த்தியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ-டொனெட்ஸ்க் நகரின் பெரும்பகுதி ரஷ்ய படைகள் வசம் சென்றது. அங்குள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய தாக்குதலில் நைட்ரிக் அமிலம் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் வெடித்து சிதறியது. நைட்ரிக் அமிலம் கலந்த வாயுவை சுவாசிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மக்கள் பேக்கிங் சோடா கலந்த … Read more

Giant Plant: உலகின் மிகப்பெரிய தாவரம்: 200 கிமீ தொலைவில் வளர்ந்த ராட்சச செடி

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் ஷார்க் விரிகுடாவில் ‘பூமியின் மிகப்பெரிய தாவரம்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபூர்வமான தாவரம், 200 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் பூமியின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் விஞ்ஞானிகள், சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் அது விரிந்துள்ளதாக ஆச்சரியப்படுகின்ரனர். இந்த ராட்சதத் தாவரம், Posidonia australis இனத்தைச் சேர்ந்தது. இது ஃபைபர்-பால் தாவரம் அல்லது ரிப்பன் (fibre-ball weed or ribbon weed) என்றும் அழைக்கப்படுகிறது. … Read more

உலகின் மிகக் காரமான மிளகாய்களைத் தின்று கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

அமெரிக்காவில், உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர், உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாம் உணவில் எடுத்து கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன் படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுகட்ட அதிபர் ஜோ பைடன் திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.   2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது. துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன், அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார். அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார். Source … Read more