பிரேசிலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பார்பிக்யூ திருவிழா… 70 ஆயிரம் பேர் வரை பங்கேற்பு.!

பிரேசிலின் பாரா மாகாணத்தில் உள்ள பாராவ்பேபஸ் நகர் உருவானதன் 34-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிட்டி ஹாலில், பிரம்மாண்ட பார்பிக்யூ திருவிழா நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான பார்பிக்யூக்கள் சமைக்கப்பட்டன. உலகிலேயே முதல் முறையாக அதிக அளவிலான இறைச்சியை கொண்டு தயாரிக்கப்பட்ட பார்பிக்யூக்களை சுவைக்க, அந்த திருவிழாவில் 70 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.   Source link

பிரதமர் மோடிக்கு இலங்கை புதிய பிரதமர் விக்ரமசிங்கே நன்றி!

மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்ப … Read more

பொருளாதாரத் தடைகளால் மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் – புடின்

பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவை விட மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ராணுவ தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத்தட்டுப்பாடு அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். … Read more

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் – இந்திய தூதரகம் விளக்கம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.  இதற்கிடையே, இலங்கையின் 26-வது பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதன்பின் பேசிய … Read more

உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட உய்குர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளன. சீனாவின் தரவுத்தளத்தில் இருந்து கசிந்த பட்டியல் இதனை வெளிப்படுத்துவதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற பெரும்பான்மையான முஸ்லீம் சிறுபான்மையினரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் தடுப்பு மையங்கள் மற்றும் சிறைகளின் இரகசிய வலையமைப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் படிக்க … Read more

வட கொரியாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு

வட கொரியாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வட கொரியாவில் நேற்று முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங் வுன் அங்கு ஊரடங்கை பிரகடனப்படுத்தி உள்ளார். நேற்று 18,000 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இன்று 3 லட்சத்து 50,000 பேர் காய்ச்சலுக்காக தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்க முன்வந்த … Read more

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 17ல் விவாதம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, வரும் 17 ஆம் தேதி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி உள்ள அந்நாட்டில், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் … Read more

அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து… 11 பேர் பரிதாப பலி!

ஹைடியில் இருந்து அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஹைடி நாட்டில் வறுமையும், வன்முறையும் அதிகரித்ததால் ஏராளமானோர் அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அகதிகளை ஏற்றி சென்ற படகு பியூர்டோ ரிகோ தீவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இதுவரை 31 பேர் … Read more

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

கொழும்பு : பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது. இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் … Read more

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, முதன்முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 6 … Read more