இலங்கையில் நீடிக்கும் பதற்றம்… ராணுவ ஆட்சி அமலாகிறதா?

இலங்கையில் 3ஆவது நாளாக நீடிக்கும் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்திடம் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மூன்றாவது நாளாக நீடிக்கும் வன்முறையால் அரசு ஆதரவாளர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரின் வீடுகளும், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுச்சொத்துக்கள் பலவும் எரிந்து சேதமடைந்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாளை காலை வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியும் போராட்டக்காரர்கள் போராட்டம் … Read more

கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்

கார்கிவ்: ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது.  அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது. இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய … Read more

சீனாவிடம் புதிய நீர்மூழ்கி கப்பல்?| Dinamalar

ஹாங்காங்:நம் அண்டை நாடான சீனாவின் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல், அதிரடி தாக்குதல் நடத்தக் கூடிய நீர்மூழ்கி கப்பலாக இருக்கலாம் என, சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங்க் மாகாணத்தில் உள்ள ஹூலுடாவ் துறைமுகத்தில், சமீபத்தில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இது, நீர்மூழ்கி கப்பல் என்பது, ‘சாட்டிலைட்’ படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.கடலில் மிதக்கும் கப்பல்கள் மற்றும் நீருக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய, அதிக திறனுடைய ‘ஹன்டர்’ வகை நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிடம் இல்லை. அடுத்த சில … Read more

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்; பிரபல அல் ஜசீரா நிருபர் படுகொலை

அல்-ஜசீராவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் குறித்த தகவல்களை சேகரிக்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் ஆய்வு நடத்தியபோது செய்தியாளர் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக டி-சர்ட் அணிந்திருந்த போதிலும், இஸ்ரேலியப் படைகளால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரபு மொழி சேனலின் பிரபல பாலஸ்தீன பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன … Read more

2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுறாவின் 10 செ.மீ நீள பல்லை கடற்கரையில் கண்டெடுத்த சிறுவன்

2 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வாழ்ந்த ராட்சத சுறா மீனின் பல்லை இங்கிலாந்து நாட்டு சிறுவன் ஒருவன் கடற்கரையில் கண்டெடுத்துள்ளான். மெகலோடான்  என்றழைக்கப்படும் பெரும்பல்லன் சுறா பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்து போன சுறா மீன் இனமாகும். 0,000 கிலோ எடையும், 60 அடி நீளம் வரை வளரக்கூடிய மெகலோடான் சுறாக்கள் திமிங்கலங்களையே வேட்டையாடும் ஆற்றல் படைத்தவை. புதைபடிவங்களுக்கு பெயர் பெற்ற பாட்சே கடற்கரையில், மெகலோடான் சுறா மீனின் 10 செண்டிமீட்டர் நீள … Read more

உச்சகட்ட போர்: ரஷியா கைப்பற்றிய நகரங்களை மீட்ட உக்ரைன் வீரர்கள்

கார்கிவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் தொடங்கி 10 வாரங்களை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி வருவதாலும், ஆயுதங்கள் உதவி செய்து வருவதாலும் ரஷிய வீரர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போராடி வருகின்றனர். இதனால் ரஷியா தான் நினைத்தப்படி உக்ரைனை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பலியாகிவிட்டனர், லட்சக்கணக்கானவர்கள் … Read more

இந்தியாவுக்கு தப்பினாரா ராஜபக்சே:இந்திய தூதரகம் மறுப்பு| Dinamalar

கொழும்பு :இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பின் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் குடும்பத்துடன் இந்தியா தப்பி சென்றுவிட்டதாக சமூகவலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது. ‘இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம்’ என, இலங்கையில் … Read more

லைவ் அப்டேட்ஸ் – உக்ரைனுக்கு 3 லட்சம் கோடி கூடுதல் நிதி- அமெரிக்கா பாராளுமன்றம் ஒப்புதல்

11.5.2022 09.25: உக்ரைனுக்கு 3 லட்சம் கோடி அளவிலான நிதி உதவியை வழங்க அமெரிக்க பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகள் வழங்கப்படும். அப்பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் ஆதரவு படைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். உலக உணவு பற்றாக்குறையை போக்க உக்ரைனில் உள்ள உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இந்த நிதி உதவும் என கூறப்பட்டுள்ளது. 06.50: ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்கு பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற போராக உக்ரைன் போர் மாறி … Read more

ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலையை உடைத்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தந்தையான டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள போராட்ட களத்துக்குள் நேற்று முன்தினம் … Read more

ட்விட்டரில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட தடை முட்டாள்தனமானது: எலோன் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை கை வசப்படுத்தியுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் முழுமையாக தனட்து கட்டுபாட்டில் கொண்டு வரும் போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக, முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தைத் தொடர்ந்து விமர்சித்து வந்த எலான் மஸ்க், டிவிட்டர் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக … Read more