உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு துாதரகம் அறிவுரை| Dinamalar

கீவ்-ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைனை விட்டு வெளியேற, இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய துாதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. … Read more

எச்சரிக்கை! கொரோனா இன்னும் போகவில்லை, புதிய ஆபத்து வருது

வாஷிங்டன்: கொரோனா நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை, இதற்கிடையில் உலகம் மற்றொரு தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், விரைவில் கொரோனா போன்ற மற்றொரு தொற்றுநோய் உலகைத் தாக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. கோவிட்-19 இலிருந்து கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து வியத்தகு அளவில் குறைந்துள்ளது என்று பில் கேட்ஸ் கூறினார். ஏனென்றால், இந்த வைரஸுக்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக அதிகரித்து உள்ளது. புதிய எச்சரிக்கை சிஎன்பிசிக்கு அளித்த … Read more

உக்ரைன் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு பைடன், புதின் தயார்; பிரான்ஸ் தகவல்

பாரிஸ்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடார்பாக பிரான்ஸ் நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் … Read more

பொதுமக்களிடம் தங்கத்தை கடனாகக் கேட்கிறது பாகிஸ்தான் அரசு <!– பொதுமக்களிடம் தங்கத்தை கடனாகக் கேட்கிறது பாகிஸ்தான் அரசு –>

கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை கடனாக வாங்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி, அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 17 பில்லியன் டாலராக சரிந்தது. இதையடுத்து பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் பொருளாதார முதன்மைக் குழுவினருடன் இம்ரான்கான் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு நிதியமைச்சர் சவுகத் தாரின், வர்த்தக வங்கிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை டெபாசிட்டுகளாகப் … Read more

ஒரே நாளில் ரஷியாவில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா: 745 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ : ரஷியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த சில நாட்களாக ருத்ரதாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் 745 பேர் தொற்றில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்தனர். இதுவரையில் … Read more

ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரம்| Dinamalar

ஹாங்காங் : ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், தற்காலிகமாக ‘மெகா’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ள நிர்வாகம், அதற்கான இடத்தை தேடி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிய நாடான ஹாங்காங்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரம் மட்டுமே. கடந்த டிச., மாதம் உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டில் பரவத் துவங்கியது. இதனால், வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. சமூகப் பரவலை … Read more

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “படையெடுப்பு தொடங்கும் தருணம் வரை, அதனை தடுக்க இராஜீய நிலையிலான நடவடிக்கையை தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்பதில் பைடன் நிர்வாகம் தெளிவாக உள்ளது என்று வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சாகி … Read more

கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவில் சுற்றுப்பயணம்.. இம்ரான்கான் சுற்றுப்பயணம் குறித்து ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு <!– கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவில் … –>

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக நாளை மறுநாள் ரஷ்யா செல்கிறார். கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்

நியூயார்க்: உக்ரைன் – ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே … Read more

சீன மோசடியாளர்களிடம் ரூ1,059 கோடி பணத்தை மக்கள் பறிகொடுத்தனர்| Dinamalar

சிங்கப்பூர்-சிங்கப்பூரில், சீனாவைச் சேர்ந்த, ‘கிரிப்டோ’ மோசடியாளர்களிடம் சிக்கி, 1,059 கோடி ரூபாய் பணத்தை, மக்கள் பறிகொடுத்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், சமீப காலமாக சீனாவில் இருந்து உருவான, ‘பிக்பட்செரிங்’ என்ற, ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் மூலம் பண மோசடி சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.இதில் முதலீடுகளை செய்ய, மக்களை மோசடியாளர்கள் துாண்டுகின்றனர். அவர்கள் கூறும் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி, அதிக பணத்தை … Read more