அமெரிக்கா | காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு – 2024ல் 11-வது சம்பவம் இது!

ஓஹியோ: ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் அர்பத் என்பவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 25 வயதான அர்பத்தின் உடல் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் மீட்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் அவரது மரணத்தை உறுதி செய்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில், “முகமது அப்துல் அர்பத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார் … Read more

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

மாஸ்கோ, ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓர்க்ஸ் நகரில் உள்ள ஒரு அணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனவே அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் … Read more

அமெரிக்காவில் நடுவானில் விமான என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து ஹூஸ்டனுக்கு போயிங் 737 விமானம் ஒன்று புறப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் அருகே தடுப்பாக இருக்கும் தகடு பிய்ந்து காற்றில் பறந்தது. இதுகுறித்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் டென்வர் விமான நிலையத்துக்கே திரும்பி தரையிறங்கியது. அதில் இருந்த … Read more

பாகிஸ்தானில் மனைவி மீது பொய் குற்றச்சாட்டு கூறியவருக்கு 80 கசையடி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்தவர் பரீத் காதர். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என மனைவி மீது குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். பின்னர் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் பரீத் காதரின் குழந்தைகள் என்பது உறுதியானது. இதனையடுத்து முன்னாள் மனைவி மீது அபத்தமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக நூதன தண்டனை வழங்க கோர்ட்டு முடிவு … Read more

இந்திய தேசியக்கொடி அவமதிப்பு… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலே, இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மாலத்தீவு முன்னாள் மந்திரி மரியம் ஷியுனா. தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார். மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றாக ‘மிகப்பெரும் பின்னடைவை … Read more

மொசாம்பிக் கடற்கரையில் படகு மூழ்கி 90 பேர் உயிரிழப்பு

மாபுடோ: தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாக மொசாம்பிக் குடியரசு உள்ளது. இந்த நாட்டின் வடக்கு கடற்கரை வழியாக ஒரு மீன்பிடி படகில் நேற்று சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நோக்கி அந்தப் படகு வந்தபோது எடை தாங்காமல் படகு மூழ்கியுள்ளது. இதில் அதிலிருந்த 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக நம்புலா மாகாணச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறும்போது, ‘‘அதிகம் பேர் பயணித்ததாலும், மோச மான நிலையில் இருந்ததாலும் படகு … Read more

பாலின மாற்று அறுவை சிகிச்சை மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தல்: வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி: பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஆகியவை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் அறிவித்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட இந்த அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் … Read more

இந்தியாவை மீண்டும் சீண்டிய மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்… கடும் எதிர்ப்பினால் அந்தர் பல்டி!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

கான்பெரா, ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ரிச்மண்ட், வின்ட்சர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சிட்னி நகரில் ரெயில் தண்டவாளத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிட்னி நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள வாரகம்பா அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் … Read more

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: எப்பிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

ஹைதராபாத்: அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் தெலுங்கு மாணவர் உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரோடு சேர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொலை, விபத்து, மர்ம உயிரிழப்பு மற்றும் இதர விஷயங்கள் இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன. அமெரிக்காவில் ஏற்கெனவே 13 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது 14-வது மாணவனாக சாய் … Read more