தைவானில் 25 ஆண்டுகளில் மிகப் பெரிய நிலநடுக்கம்.. ரிக்டர் 7.4 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை

Tsunami Warning System: தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தைவானில் கடும் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தைபே: தைவானில் இன்று(புதன்கிழமை) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 7.2 ஆக பதிவாகி உள்ள தெரிவித்துள்ள ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. தைவான் தலைநகர் தைபேவை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இது 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தைவான் மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், … Read more

ஐ.நா.,பணியாளர்கள் மரணம்: தற்செயலாக நடைபெற்ற தாக்குதல் – நெதன்யாகு விளக்கம்

ஜெருசலேம், காசாவில், இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 7 பேர் பலியானதாக உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய உணவுக் கலைஞர் ஜோஸ் ஆன்ட்ரெஸால் நிறுவப்பட்ட உலக மத்திய சமையலறை என்ற உணவு அறக்கட்டளையில் இணைந்து காசாவில் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்க கனடா இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என ஏழு பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனடியாக, … Read more

‘எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ – 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம் பேங்க்மேன் வருத்தம்

வாஷிங்டன்: தன்னுடைய கிரிப்ட்டோ நிறுவனம் மூலம், வாடிக்கையாளர்களின் 8 பில்லியன் டாலர் (ரூ.66,400 கோடி) பணத்தை மோசடி செய்ததாக, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றம் சாம் பேங்க்மேனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாம் பேங்க்மேன், தன்னுடைய சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். ‘‘2022-ம் ஆண்டில் நான்எடுத்த பல தவறான முடிவுகள் காரணமாகவே எப்டிஎக்ஸ் திவாலானது. நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அந்த சமயத்தில் நினைக்கவில்லை. பல வாடிக்கையாளர்கள் கடுமையான இழப்பைச் … Read more

பால்டிமோர் பாலம் விபத்து… கப்பலில் உள்ள 20 இந்திய பணியாளர்கள் நிலை என்ன..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பாலத்தின் மீது கப்பல் மோதியதன் காரணமாக 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 21 பணியாளர்கள் இருந்தனர்.

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா: கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை … Read more

மொழிப்பிரச்சினையால் குளறுபடி… பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை

செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை குறித்து கூறியிருக்கிறார். ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக புரிந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறாக நினைத்து அதற்கான வார்டுக்கு அனுப்பி உள்ளனர். அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். அந்த வார்டில் … Read more

தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

ஜெருசலேம், காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் சுமார் 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். … Read more

சோமாலியாவுக்கு 14 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு

மொகாதிசு, ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 2016-ம் ஆண்டு முதல் காலரா தொற்று வேகமாக பரவுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு காலரா தொற்று பரவி உள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அங்கு விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் காலரா இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த சோமாலியாவுக்கு 14 லட்சம் வாய்வழி காலரா தடுப்பூசி வழங்க … Read more