More Than 70 Members Of A Family Killed In Gaza After Israeli Airstrike | இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்ப உறவினர்கள் 70 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காசா: காசாவில், இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஒரே குடும்ப உறவினர்கள் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், ஓய்வு பெற்ற ஐ.நா., ஊழியரும் அடங்குவார். இஸ்ரேலுக்குள், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்களின் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை குண்டுகளை வீசி வருகிறது. காசாவின் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேலிய விமானப்படை குண்டு வீசி தாக்கியது. இதில் ஐ.நா., நிவாரண வளர்ச்சி திட்டத்தில் ஊழியராக பணிபுரிந்த, … Read more

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் – ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த பணி 2033-ம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினத்தந்தி Related Tags : அணுசக்தி  நீர்மூழ்கி கப்பல்  ஒப்பந்தம்  கையெழுத்து  Nuclear power  submarine  treaty  signature 

ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 % அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா, உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது. நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெங்களூரில் மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு … Read more

Drone Strike On Ship Off Gujarat Was Fired From Iran, Says US | கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் பின்னணியில் ஈரான்: அமெரிக்கா தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: குஜராத், போர்பந்தர் கடற்கரையில், 20 இந்திய பணியாளர்களுடன் ரசாயன டேங்கரை தாக்கிய ‘ட்ரோன்’ ஈரானில் இருந்து ஏவப்பட்டது என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதில், அந்தக் கப்பலில் இருந்த, 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள … Read more

வியட்நாம்: குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் பேர் பலி

ஹனோய், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகிறது. நாட்டின் தெற்கு மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கே இதுரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் குரங்கம்மை பாதிப்பு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஹுய்ன் தி … Read more

அமெரிக்கா; இந்து கோவிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதி வைக்கப்பட்டதால் பரபரப்பு

வாஷிங்டன், கலிபோர்னியாவின் நேவார்க் நகரில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. அதில் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் இதுபோல் இந்து கோவிலில் வெறுப்புப் பிரசாரம் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல. அண்மையில் கனடாவில் இதுபோல் இந்து கோவில்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தினத்தந்தி Related Tags : அமெரிக்கா  காலிஸ்தான்  இந்து கோவில்  Hindu temple  Hindu temple vandalised 

துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு புறப்பட்ட விமானம் பிரான்சில் தரையிறக்கம் – போலீசார் விசாரணை

பாரிஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, விமான … Read more

Hijacking a plane with Indians? Foreign officials talk to travelers! | இந்தியர்களுடன் விமானம் கடத்தலா? பயணியரிடம் துாதரக அதிகாரிகள் பேச்சு!

பாரிஸ்: ஆள்கடத்தல் நடப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, 303 இந்தியர் பயணித்த தனியார் விமானம், பிரான்சின் பாரிஸ் அருகே திடீரென தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள், விமான பயணியரிடம் பேச்சு நடத்தி வருகின்றனர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவுக்கு, தனியார் விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. ஐரோப்பிய நாடான ருமேனியாவைச் சேர்ந்த, ‘லெஜண்ட் ஏர்லைன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்கும் இந்த விமானம், … Read more

21 Indians survive attack on cargo ship | சரக்கு கப்பல் மீது தாக்குதல் 21 இந்தியர்கள் உயிர் தப்பினர்

துபாய்: இந்திய பெருங்கடல் பகுதியில், இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, பயங்கரவாதிகள், ‘ட்ரோன்’ வாயிலாக தாக்குதல் நடத்தினர். இதில், அந்தக் கப்பலில் இருந்த, 21 இந்தியர்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. அதை ஒட்டியுள்ள ஏமன் நாட்டில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அவ்வப்போது, இஸ்ரேல் மீது ஹவுதி … Read more