University student shooting kills 14 in Czech Republic | பல்கலை மாணவர் துப்பாக்கி சூடு செக் குடியரசில் 14 பேர் பலி

பராகுவே:செக் குடியரசு நாட்டில் உள்ள பல்கலையில், மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகர் பராகுவேவில் உள்ள சார்லஸ் பல்கலையின், தத்துவவியல் துறைக்குள் நேற்று முன்தினம் வந்த சக மாணவர், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிசூடு நடந்த பகுதியை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் … Read more

Chandrayaan-3 success: Iceland honors ISRO | சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவை கவுரவித்த ஐஸ்லாந்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹூசாவிக்: சந்திரயான் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோவுக்கு, ஐஸ்லாந்து நாட்டின் உயரிய விருதான ‛ லீப் எரிக்சன் லூனார் ‘ விருது வழங்கப்பட்டு உள்ளது. நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதில் வல்லரசு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், ‛சந்திரயான் 3′ திட்டம் மூலம் இந்தியா அந்த சாதனையை படைத்தது. இஸ்ரோ அனுப்பிய ‛சந்திரயான்-3′ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆக.,23ம் தேதி நிலவின் தென் பகுதியில் … Read more

அரசு ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கு | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் … Read more

பிரேக் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி

பிரேக்: செக் குடியரசின் பிரேக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்தப் படுகொலையில் ஈடுபட்டது ஒரு மாணவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயர் டேவிட் கொசாக். 24 வயதான அவர் அதே பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்துவந்தார். துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்ட மாணவர் டேவிட் கொசாக் படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். அவருக்கு இதுவரை எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று பிரேக் காவல்துறை … Read more

எரிமலையால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு நிவாரணப் பொருட்கள்: இந்தியா அனுப்பியது

புதுடெல்லி: எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பபுவா நியூ கினியாவுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பியது. தெற்கு பசிபிக் நாடான பபுவா நியூ கினியாவில் உள்ள ‘உலவுன்’ என்ற எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதி சீறி புகையை வெளியேற்றியது. இந்த சாம்பல் புகை வானில் 15 கி.மீ உயரத்துக்கு எழும்பியது. 1,700-ம் ஆண்டுகளில் இருந்து அவ்வப்போது இந்த எரிமலை வெடித்து வருகிறது. கடைசியாக கடந்த … Read more

செக் குடியரசு நாட்டில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி

பிரேக், ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று மர்ம நபர் ஒருவர் நவீன துப்பாக்கியுடன் வந்தார். திடீரென அந்த பள்ளியில் நுழைந்த அவர் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஏராளமானோர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 25 பேர் … Read more

காணாமல் போன இந்திய மாணவி பற்றி தகவல் அளித்தால் 10 ஆயிரம் டாலர் பரிசு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிவிப்பு

நியூயார்க்: குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்தவர் மயூஷி பகத். இவர் 2016-ல் அமெரிக்கா வந்தார். நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்துக் கொண்டிருந்தார். ஜெர்சி சிட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தங்கியிருந்தார்.கடந்த 2019 ஏப்ரல் 29-ம் தேதி மாலை, இவர் தனது குடியிருப்பை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் 2019, மே 1-ம் தேதி புகார் அளித்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் … Read more

கடுமையான சித்தாந்த நிலைப்பாடு தேவையில்லை – போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்

ரோம், போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை புரிந்து கொள்வதில் இருந்து தடுத்து விடும் என்றும் வாடிகன் நிர்வாகத்தினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘நல்ல நோக்கங்கள் என்ற போர்வையில் அடிக்கடி நம்மை யதார்த்தத்திலிருந்து பிரித்து முன்னேற விடாமல் தடுக்கும் கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்போம்’ என … Read more

'இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது' – ஆண்டனி பிளிங்கன்

வாஷிங்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது. குவாட் கூட்டணி மூலம் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி-7 நாடுகளுடன் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கமாக இணைந்துள்ளது.” இவ்வாறு ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். தினத்தந்தி Related Tags : India  Anthony Blinken  US  இந்தியா  ஆண்டனி பிளிங்கன்  அமெரிக்கா 

22 வயதில் சிறைத்தண்டனை: 70 வயதில் நிரபராதி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

வாஷிங்டன், அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக … Read more