அமெரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் தனேஜா உயிரிழந்தார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம், டன் லோரிங் நகரை தலைமையிடமாகக் கொண்டு டைனமோ டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல் படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் தனேஜா ( 41 ) பதவி வகித்தார். இவர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் ஆவார். கடந்த 2-ம் தேதி அமெரிக்க தலை நகர் வாஷிங்டனில் உள்ள ஓட்டலுக்கு விவேக் சென்றார். அங்கு அவருக்கும் மர்ம … Read more

பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி; ராணுவம் ஆதரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி, 265-ல் 250 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்திருந்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் … Read more

Pakistan, Gil coalition rule? : No party has majority | பாக்.,கில் கூட்டணி ஆட்சி? : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பொது தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பேச்சு நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றனர். , பாகிஸ்தானில் மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். மீதியுள்ள இடங்களில், … Read more

Another Indian massacre continues in America | மற்றொரு இந்தியர் படுகொலை அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஓர் உணவகத்தின் வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனின் புறநகர் பகுதியான அலெக்சாண்டாரியாவில் வசித்தவர் விவேக் தனேஜா, 41. இந்திய வம்சாவளியான இவர், டைனமோ டெக்னாலஜிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த 2ம் தேதி, வாஷிங்டன் நகரில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்ற … Read more

காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் – 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியரகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் … Read more

அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ஜார்ஜியாவின் லிதோனியா நகரில் மற்றொரு மாணவர் விவேக் சைனியை போதை ஆசாமி ஒருவர் கொடூரமாக தாக்கினார். இந்த ஆண்டில் 4 இந்திய மாணவர்கள் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 41 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி நிர்வாகி விவேக் தனேஜா, வாஷிங்டனில் மர்ம நபரால் கடுமையாக … Read more

ரஃபா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 10 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி

டெல் அவிவ்: காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில்10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளின் அதிகார அத்துமீறலுக்கு இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் போரில் இதுவரை 28 … Read more

விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி இறந்த நபர்… பயத்தில் அலறிய சக பயணிகள்

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையாக மூச்சு வாங்கியது. சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. பின்னர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி கதறி அழுதார். சக பயணிகளும் பயத்தில் அலறினர். விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த … Read more