ஹமாஸ் பிடியில் இருந்து விடுதலையான இஸ்ரேல் சிறுவன்: தந்தையை பார்த்ததும் கட்டியணைத்து மகிழ்ச்சி – வைரல் வீடியோ

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. போரில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர். … Read more

வெளிநாட்டினர் உள்பட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு

டெல் அவிவ், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், பணய கைதிகளை பேச்சுவார்த்தை வழியே விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே 4 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பணய கைதிகள் 13 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். இஸ்ரேலிய பணய கைதிகளில் பலர் அந்நாட்டின் கிப்புஜ் பியரி பகுதியில் … Read more

Canadian Prime Ministers allegation is barrage of questions from India | கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்திய துாதர் சரமாரி கேள்வி

ஒட்டாவா:”காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், ஆதாரம் இல்லாமல், இந்தியாவை குற்றவாளியாக்கியுள்ளதை ஏற்க முடியாது,” என, கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மா குறிப்பிட்டார். வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த, ஜூன் மாதம் கொல்லப்பட்டார். கண்டனம் இந்த விவகாரத்தில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த செப்டம்பரில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் … Read more

இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்ததாக 2 பாலஸ்தீனியர்களை கொன்று மின்கம்பத்தில் கட்டி தொங்கவிட்ட ஆயுதக்குழுவினர்….!

ரமல்லா, இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர். … Read more

13 இஸ்ரேலியப் பணயக்கைதிகளையும், 7 வெளிநாட்டினரையும் விடுவிக்கும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு

காசா, இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த மாதம் 7-ந் தேதி திடீர் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அங்கு 1,200 பேரை கொன்று குவித்தனர். அதோடு பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் தரை, கடல், வான் என மும்முனைகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் … Read more

ஆஸ்திரியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

ஆஸ்திரியா, மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரிய போலீசார் தெரிவித்தனர். கடும் பனிப்பொழிவான மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த நான்கு பேரையும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. விபத்துக்கான காரணமும் இன்னும் அறியப்படாத நிலையில், விபத்து குறித்தும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும் ஆஸ்திரிய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தினத்தந்தி Related Tags : ஆஸ்திரியா  … Read more

Pakistan cricketers unhappy with chief selector for not issuing NOCs to play in foreign leagues | வெளிநாட்டு போட்டிகளில் விளையாட தடை?: பாக்., கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி!

கராச்சி: வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் காலம் தாழ்த்துவதால் வீரர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தியாவில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதனையடுத்து, வஹாப் ரியாஸ் தலைமையில் புதிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு வீரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் வஹாப் ரியாஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் … Read more

33 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனர்கள் விடுதலை: இஸ்ரேல் தகவல்

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா … Read more

Meet 19-Year-Old Clemente Del Vecchio, Worlds Youngest Billionaire | உலகின் இளம் வயது கோடீஸ்வரர்: போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பிடித்த இத்தாலி இளைஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: போர்ப்ஸ் பத்திரிகை கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள 19 வயது இத்தாலி தொழிலதிபரின் மகன் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். இத்தாலிய தொழிலதிபரும், உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி நிறுவனமான எசிலர் லக்சோட்டிகாவின் உரிமையாளரான லியொனார்டோ டெல் வெச்ஹியோ கடந்த ஆண்டு 87 வயதில் காலமானார். அவரது சொத்துகள், மனைவிக்கும், 6 குழந்தைகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன. அந்த வகையில், அவரது ஒரு மகன் கிளமென்டோ டெல் வெச்ஹியோ (19) … Read more

விசா இல்லாமல் வருவதற்கு 6 நாடுகளுக்கு அனுமதி – சீனா அறிவிப்பு

புதுடெல்லி: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்க உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு குடிமக்களும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்கி உள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் … Read more