Meet 19-Year-Old Clemente Del Vecchio, Worlds Youngest Billionaire | உலகின் இளம் வயது கோடீஸ்வரர்: போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பிடித்த இத்தாலி இளைஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: போர்ப்ஸ் பத்திரிகை கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள 19 வயது இத்தாலி தொழிலதிபரின் மகன் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். இத்தாலிய தொழிலதிபரும், உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி நிறுவனமான எசிலர் லக்சோட்டிகாவின் உரிமையாளரான லியொனார்டோ டெல் வெச்ஹியோ கடந்த ஆண்டு 87 வயதில் காலமானார். அவரது சொத்துகள், மனைவிக்கும், 6 குழந்தைகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன. அந்த வகையில், அவரது ஒரு மகன் கிளமென்டோ டெல் வெச்ஹியோ (19) … Read more

விசா இல்லாமல் வருவதற்கு 6 நாடுகளுக்கு அனுமதி – சீனா அறிவிப்பு

புதுடெல்லி: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்க உள்ளது. டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு குடிமக்களும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி வழங்கி உள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் … Read more

Need for coordination among Hindu organizations | ஹிந்து அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு தேவை

பாங்காக்: ”ஹிந்துக்களின் குரலை ஒலிக்கும் வகையில், உலகெங்கும் உள்ள ஹிந்து அமைப்புகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு தேவை,” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே குறிப்பிட்டார். ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில், உலக ஹிந்து மாநாடு நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது: உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல ஹிந்து அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. மொழி, ஜாதி, துணைப் பிரிவு, குருக்கள் என, இவர்கள் பல … Read more

Israel-Hamas War News Live Updates: Second hostage group returns to Israel after Hamas release | இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெருசலேம்: இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து, 240க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக … Read more

39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ரஃபா (காசா): இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7-ம் தேதிதெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக … Read more

இந்த நாடுகளில் இருந்து சீனா செல்ல விசா தேவையில்லை – வெளியான அறிவிப்பு

பீஜிங், சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது… அதன்படி ,வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு மக்களும் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என சீனா அறிவித்துள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என … Read more

டாக்டர், ஜிம் பயிற்சியாளர்… 33 வயதில் மாரடைப்பு; இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்

சாவோ பாவ்லோ, பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (வயது 33). டாக்டரான இவர் ஜிம் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் ஜிம்மில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் பற்றிய புகைப்படங்கள், வருங்கால மனைவியுடன் செலவிட்ட நேரம் உள்ளிட்ட அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்திருக்கிறார். அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், தடகள வீரர்கள் மற்றும் அவர் வழிகாட்டிய பிற உடற்பயிற்சியாளர்களுக்கு கிடைத்த ஆச்சரியம் தரும் முடிவுகளையும் அவர் … Read more

பிணைக் கைதிகளை விடுவிப்பதில் தாமதம்: ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் மற்றும் காசா மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது என இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் பிணைக் கைதிகளை ஒப்பந்தத்தின் படி இரண்டாவது நாளன்று விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டி வருவதாக தகவல். ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது ஹமாஸ். அதுவே தாமதத்துக்கு காரணம் … Read more