நீர்யானையிடம் சிக்கி உயிரிழந்த வனச்சரகர்.. வேட்டைக்காரர்களை பிடிக்க சென்றபோது நேர்ந்த துயரம்

தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணம், முகுஜி பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இயற்கை வாழ்விடங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்த பகுதியில், சட்டவிரோத வேட்டைக்காரர்களிடம் இருந்து விலங்குகளை பாதுகாப்பதற்காக வனச்சரகர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருட்டத் தொடங்கியபிறகு, வனப்பகுதிக்குள் வேட்டைக்காரர்கள் நுழைந்திருப்பதாக வனச்சரகர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களின் கால்தடங்களை வனச்சரர்கள் கண்காணித்து வந்தனர். கால் தடங்கள் காட்டும் திசையை நோக்கி படிப்படியாக முன்னேறினர். அப்போது ஸ்பாமண்ட்லா மதேபு (வயது 31) என்ற … Read more

Monarchy Again: Intensification of Struggle in Nepal | மீண்டும் மன்னராட்சி : நேபாளில் தீவிரமடையும் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு : நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வரக்கோரி போராட்டம் துவங்கியுள்ளது. நேபாளத்தில், 2007ல், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008ல் குடியரசு உருவானது. ஜனநாயக நடைமுறை படி நடந்த தேர்தல் நடந்தாலும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதும், பிரதமர்கள் பதவி விலகுவதும் , ராஜினாமா செய்வதும் என அரசியல் குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் நேபாளில் அந்நாட்டின் பிரபல தொழிலதிபர் துர்க குமார் பராசி தலைமையிலான அமைப்பு மீண்டும் மன்னராட்சி கொண்டு வருவதற்கான … Read more

ஏமனில் இருந்து சீறிப்பாய்ந்த ஆளில்லா விமானங்கள்.. செங்கடலில் வீழ்த்திய அமெரிக்க கடற்படை

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஹவுதி கிளர்ச்சிக் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதலை நடத்துகிறது. மேலும், இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இஸ்ரேல் கொடியுடன் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் அனைத்தும் குறிவைக்கப்படும் என்றும் ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் … Read more

மருத்துவமனைகளுக்குள் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கங்கள்.. வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

டெல் அவிவ், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா வந்தது. அப்போது முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான ஆயுத மோதல் தீவிரமானது. இந்த சூழலில்தான் கடந்த மாதம் 7-ந் தேதி முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் … Read more

India surprised, concerned when…: US on foiled plot to kill Khalistan terrorist Gurupadwant Singh Bannun | காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சதி முறியடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த சதியை அந்நாடு முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர்கள் என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவன் ஆவார். இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், இவரை, அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த … Read more

“வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள்” – இஸ்ரேல் தகவல்

ஜெருசலேம்: “இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் … Read more

Amid Reports Of Mysterious Pneumonia Outbreak In China, WHO Said This | சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிம்மோனியா: அறிக்கை கேட்கிறது உலக சுகாதார அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் உருவான கோவிட் வைரஸ் தொற்று உலகளவில் பரவி மக்களை அச்சுறுத்திய நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், இது குறித்த தகவல்களை பகிரும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. சீனாவில், சுவாச பிரச்னை கோளாறுகளுடன் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இது தொடர்பாக சீன … Read more

குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா: சீன அரசு தீவிர கண்காணிப்பு – அறிக்கை கோரும் உலக சுகாதார நிறுவனம்

பீஜிங்: சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதால் அது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிமோனியா தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்படி அந்நாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகச் செய்திகளின்படி சீன மருத்துவமனைகளில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துவரப்படும் போக்கு மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகள் அனைவருமே சுவாசக் கோளாறுடனேயே அழைத்துவரப்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக நவம்பர் 12-ல் … Read more

சட்டவிரோத குடியேற்றத்தில் 3-வது இடத்தில் இந்தியர்கள்: அமெரிக்க பிஇடபிள்யூ மையம் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள பிஇடபிள்யூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்குள் பல்வேறு நாட்டவர் சட்டவிரோதமாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் 3-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் வரை 96,917 இந்தியர்கள் சரியான ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். 2019 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 5 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 19,883 இந்தியர்கள் … Read more

பிணை கைதிகளை விடுவிக்க ஏதுவாக இஸ்ரேல் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிப்பு

ஜெருசலேம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் 40 நாட்களை … Read more