போர் நிறுத்த ஒப்பந்தம்: முதல் கட்டமாக 13 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு

காசா, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 வாரமாக தொடர்ந்து வரும் இந்த போரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. காசாவில் மட்டும் இதுவரை 14,532 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் சிறுவர்கள், 4 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். இதுதவிர சுமார் 7 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி உள்ளனர். இந்த … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமல்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இதில், சிலரை ஹமாஸ் விடுதலை செய்த நிலையில் இன்னும் 240 பேர் பிணைக்கைதிகளாக காசாவில் உள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் … Read more

தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது: 25 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காசா: முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் … Read more

போலீசார்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டையில் பறிபோன மாணவர்களின் உயிர்

பெஷாவர்: பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டம், கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில், போலீசாரால் தேடப்பட்ட ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் … Read more

நெதர்லாந்து தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் சர்ப்ரைஸ் வெற்றி.. பிரதமர் ஆக வாய்ப்பு

தி ஹேக்: நெதர்லாந்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் திடீர் திருப்பமாக, தீவிர வலதுசாரி கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் (வயது 60) தலைமையிலான சுதந்திரக் கட்சி (பிவிவி) அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் பிவிவி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பிவிவி கட்சி, இந்த தேர்தலில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான … Read more

8 பேரின் மரண தண்டனை.. இந்தியாவின் அப்பீல் மனுவை ஏற்றது கத்தார் நீதிமன்றம்

தோகா: அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 8 பேரும் கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை … Read more

மீண்டும் மன்னர் ஆட்சி கோரி போராட்டம் – பாதுகாப்பை பலப்படுத்தியது நேபாள அரசு

காத்மாண்டு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் … Read more

Navy Veterans: Appeal against Indian death sentence: Qatar court accepts | இந்தியர்களின் மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு: கத்தார் நீதிமன்றம் ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தோகா: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை ஆய்வு செய்த பிறகு விசாரணை நடக்கும் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படையில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி … Read more

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளிமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக … Read more