கடலோர காவல் படை விமானத்துடன் மோதியதில் ஜப்பான் விமானம் தீப்பற்றியது: 5 வீரர்கள் உயிரிழப்பு, 17 பயணிகள் காயம்

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கடலோர காவல் படை விமானத்துடன் மோதி நேற்று தீப்பிடித்ததில், 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஜப்பானின் கொக்கைடோ பகுதியிலிருந்து புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ350 விமானம் 379 பேருடன், டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. அப்போது அதே ஓடு பாதையில் ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான எம்ஏ722 ரக விமானம், மேற்கு ஜப்பானின் நிகாடா விமான நிலையத்துக்கு செல்ல தயாராக … Read more

Disneys Mickey Mouse : Expired copyright | டிஸ்னியின் மிக்கி மவுஸ்: காலாவதியானது காப்புரிமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான, ‘மிக்கி மவுஸ்’ சம்பந்தமான, ‘டிஸ்னி’ நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது. கடந்த 1928ம் ஆண்டு, ‘ஸ்டீம்போட் வில்லி’ என்னும் குறும்படம் வாயிலாக, மிக்கி மவுஸ் கதாபாத்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிஸ்னி’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் படி, 95 ஆண்டுகள் வரை காப்புரிமை செல்லுபடியாகும். இதன் அடிப்படையில், குறிப்பிட்ட … Read more

Japan Earthquake; 55 people died and thousands of buildings were damaged | ஜப்பான் நிலநடுக்கம்; 55 பேர் பலி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதம்

வாஜிமாஜப்பானில், நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள், சாலைகள் சேதமடைந்தன. கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் நேற்று முன்தினம் பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக வைத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மின்சார நிலையம் இவை ரிக்டர் அளவில் 5 முதல் 7.6 வரை பதிவானது. இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. … Read more

ரன்வேயில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்.. டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த … Read more

செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல் – தென்கொரியாவில் பரபரப்பு

சியோல், தென்கொரியா நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் லி ஜி மியங். இவர் இன்று காலை அந்நாட்டின் புசன் மாகாணம் ஹடியொக் தீவில் புதிதாக கட்டப்பட்டுவரும் விமான நிலையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், லி ஜி மியங் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு லி பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லி ஜி மியங்கின் ஆதரவாளர்போல் வந்த நபர் ஆட்டோகிராப் (கையெழுத்து) வாங்குவதுபோல் அவரை நெருங்கியுள்ளார். திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர்க்கட்சி தலைவர் … Read more

“ஒருவித அமைதியில் உயிர் பயம் உணர்ந்தேன்” – ஜப்பான் நிலநடுக்க அனுபவம் பகிர்ந்த முதியவர்

டோக்கியா: ஜப்பான் நாட்டில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள், கட்டிடங்கள் பலவும் சேதமடைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக அப்பகுதி மக்கள் அல்லல்படுகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது தங்கள் எவ்வாறு உணர்ந்தோம் என்பதை இருவர் விவரித்திருக்கின்றனர். ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் … Read more

தன்னை கடித்த எலியை பழிவாங்கிய கல்லூரி மாணவி

பீஜிங், சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவியை எதிர்பாராதவிதமாக எலி ஒன்று கடித்துள்ளது. அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து வெறித்தனமாக கடித்து வைத்துள்ளார். அதன் கழுத்து பகுதியில் பலமாக கடித்து தனது கோபத்தை தீர்த்துக்கொண்டார். அந்த மாணவியின் … Read more

ஜப்பான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு..!

டோக்கியோ, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்தபட்சமாக 4.0 ரிக்டர் புள்ளிகளில் இருந்து அதிகபட்சமாக 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின.இதனால் ஜப்பானின் … Read more