‘ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்…’ – இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ எச்சரிக்கை

வாஷிங்டன்: பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார். அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்த வேண்டும். … Read more

உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யா – உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீடித்து வரு​கிறது. அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி​யில் பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப் இரு நாடு​கள் இடையே போரை நிறுத்த சமரச முயற்​சிகளை தொடங்​கி​னார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெற​வில்​லை. இந்​நிலை​யில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும். புதின் … Read more

இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சாதனை: 18 நாட்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது விண்கலம்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. தனியார் நிறுவனமான அக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின. இதில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், … Read more

அழகாய் இருந்தது ஒரு குற்றம்…? மொட்டை அடித்து… ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை

ஷார்ஜா, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் (வயது 32). கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்ததும், கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அவர் ஷார்ஜாவில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந்தேதி விபன்சிகாவும், அவருடைய ஒரு வயது மகளும் மரணம் அடைந்து கிடந்தனர். விபன்சிகா தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், தடய அறிவியல் ஆய்வில், அந்த குழந்தை, … Read more

வெற்றிகரமாக கடலில் இறங்கியது டிராகன் விண்கலம்… வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா

கலிபோர்னியா, ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர். விண்ணில் ஏவப்பட்ட … Read more

சிரித்தபடியே டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா

கலிபோர்னியா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளை முடித்துக் கொண்டு சுபான்ஷு சுக்லா அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேரும் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய … Read more

பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி; வீடியோ வைரல்

துபாய், வீட்டைக் கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்று கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். ஏனென்றால் திருமணம் முடிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை என்பதால், இந்த பழமொழி வந்தது. திருமண நிகழ்வானது, ஜாதகப் பொருத்தத்தில் தொடங்கி, பெண் பார்த்தல், படிப்பு, அந்தஸ்து என பல்வேறு நிலைகளை கடந்து கடைசியில் திருமணம் என்ற பந்தத்தில் வந்து நிற்கும். இவ்வாறு நடத்தப்படும் திருமணங்கள் ஒரு கூட்டு விழா போன்றது. பல்வேறு ஊர்களில் இருக்கும் சொந்தங்கள் அனைத்தையும் பத்திரிகை வைத்து அழைத்து … Read more

சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

பெய்ஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறையாகும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால். கோபம் அடைந்த பாகிஸ்தான் சீனாவிடம் உதவியை நாடியுள்ள சூழலில், ஜெய்சங்கரின் சீன சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், சீனா சென்றுள்ள … Read more

விண்வெளி ஆய்வு நிறைவு – வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா!

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது. ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் இந்திய … Read more

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சீனா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா … Read more