காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றனர். கடந்த 1-ம் தேதி எஸ்​சிஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஹோட்​டலுக்கு புறப்​பட்​டார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடியை​யும் அவர் தனது காரில் அழைத்​துச் சென்​றார். இரு தலை​வர்​களும் ஹோட்​டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்​க​வில்​லை. சுமார் … Read more

ஐ.நா. பொது சபை கூட்டம்; பிரதமர் மோடி அமெரிக்க பயணம் ரத்தாகிறது?

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் இம்மாத இறுதியில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடை பெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரி விதிப்பினால் அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல மாட்டார் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்… 2 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு – டெல்லியில் நில அதிர்வு

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்ஸ்டகிராம், யூடியூப் உட்பட 26 செயலிகளுக்கு நேபாள அரசு தடை

காத்மாண்டு, நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆக.28 ஆம் தேதி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், இன்று நள்ளிரவு முதல் நேபாளத்தில் தடை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில், பேஸ்புக், எக்ஸ் , இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற … Read more

நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?

காத்மாண்டு: நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு. நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள … Read more

கிம் ஜாங் உன் பயன்படுத்திய பொருட்களை துடைத்த உதவியாளர்கள்: காரணம் என்ன?

மாஸ்கோ, இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை தோற்கடித்ததை சீனா கொண்டாடும் வகையில் நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன் பங்கேற்றனர். அவர்கள் ஜி ஜின்பிங் உடன் சேர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தபின், கிம் ஜாங் உன்னின் உதவியாளர்கள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சந்திப்பு … Read more

மே 9 வன்முறை வழக்கு; இம்ரான் கானின் மற்றொரு மருமகனுக்கு ஜாமீன்

லாகூர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர், அவருக்கு எதிராக நிறைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அவர் விடுதலையாக முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்க கோரி, கடந்த மே 9 அன்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பொருட்களை சூறையாடினர். … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,205 ஆக உயர்வு

காபூல், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. .இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை 2,205 பேர் பலியானதும், 3,394 பேர் படுகாயமடைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் … Read more

காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு செப். 31 மற்றும் ஆக.1 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பின் கலந்து கொண்ட்னர். இந்த மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை … Read more

இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

மாஸ்கோ: இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 பில்​லியன் டாலருக்கு வாங்க இந்​தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. அதன்​படி இந்​தி​யா​வுக்கு வழங்​கப்​பட்ட எஸ்​-400 ஏவு​கணை​களும், உள்​நாட்டு தயாரிப்பு வான் பாது​காப்பு ஏவு​கணை​களும் இணைந்து ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் பயன்​படுத்​தப்​பட்​டன. இவை, பாகிஸ்​தானில் இருந்து ஏவப்​பட்ட ஏவு​கணை​கள் … Read more