அதிபர் ட்ரம்ப் உடன் மோதல்: அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். “அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் … Read more

இந்தியா விடுத்த வேண்டுகோளால் நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது

புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார். இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, மோசடி மற்றும் குற்றச் … Read more

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை

பியூனஸ் அயர்ஸ்: அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அர்​ஜென்​டி​னா​வில் லித்​தி​யம் சுரங்​கங்​களை அமைப்​பது குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அர்​ஜென்​டினா தலைநகர் பியூனஸ் அயர்​ஸுக்கு சென்​றார். விமான நிலை​யத்​தில் ஏராள​மான இந்​தி​யர்​கள், அவரை உற்​சாக​மாக வரவேற்​றனர். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பியூனஸ் அயர்​ஸில் இந்​திய சமூகத்​தினரின் அன்​பான வரவேற்​பால் நெகிழ்ச்சி அடைந்​தேன். இந்​தி​யா​வில் இருந்து ஆயிரக்​கணக்​கான கி.மீ. தொலை​வில் … Read more

வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். இதனை தொடர்ந்து மத்திய அரசு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வேண்ட்ஸ்வொர்த் சிறையில் … Read more

12 மணிநேரத்தில் 1,113 பேர்… உலக சாதனை படைத்து விட்டேன்; லில்லி பிலிப்ஸ் மகிழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்ஸ், ஒவ்வொரு துறையிலும் சாதனை படைப்பதற்காக இளம் வயதிலேயே ஆர்வத்துடன் உழைப்பவர்களை, அதற்காக கடின பயிற்சிகளை மேற்கொள்பவர்களை பற்றி அறிந்திருப்போம். கல்வி, விளையாட்டு, இசை என பல்வேறு துறைகளிலும் உலக சாதனை படைத்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் படைத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிய உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டு உள்ளது. லில்லி பிலிப்ஸ் என்பவர் அவருடைய 23 வயதில் இந்த புதிய சாதனையை படைத்து இருக்கிறார். பிரபல ஆபாச பட நடிகையான லில்லி, ஒன்லிபேன்ஸ் … Read more

“ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாக். தயார்தான், ஆனால்…” – பிலாவல் பூட்டோ

இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி … Read more

இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை – இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

லண்டன், இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, சாலையில் சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்தார். அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து அக்டோபர் 23-ந்தேதி பூங்காவில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசாருக்கு … Read more

வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

Dubai Air Taxi Test : துபாயில் முதன்முறையாக வான்வழி டாக்சி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெஸ்ட், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். இதற்கு அனைத்து நாடுகளும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, பல்வேறு விதமான வரி விகிதங்களை மாற்றி 90 நாட்களுக்கு தற்காலிக அடிப்படை வரியாக 10%-ஐ நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்கா உடன் … Read more

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டில் பிரதமர் மோடியின் பயணம் … Read more