ஸ்லீப் அப்னியா நோய்க்கு CPAP கருவியைப் பயன்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக ‘ஸ்லீப் அப்னியா’ எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு CPAP சிபேப் எனும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சமீபகாலமாக பைடனின் முகத்தில் சிபேப் கருவி பொறுத்தியதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிய நிலையில் அது பேசுபொருளானது. இது தொடர்பாக வெளியான பல்வேறு ஊகங்களை களையும் வண்ணம் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் பைடன் … Read more

Human Remains Recovered From Wreckage Of Titanic Sub: US Coast Guard | நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‛‛டைட்டானிக்” கப்பலை பார்க்க சென்ற போது நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி உயிரிழந்த 5 தொழிலதிபர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 1912ம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கடனா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற … Read more

உலகில் உள்ள தனியார் படைகள்! அரியணையையே கவிழ்க்கும் சக்தி படைத்த ’தனியார் ராணுவங்கள்’

Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் ‘வாக்னர்’ போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?

இந்தியாவால் இலங்கைக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது: இந்தியாவுக்கான இலங்கை தூதர் தகவல்

புதுடெல்லி: இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியால்தான் தங்கள் நாட்டுக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் மாதம் இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், பால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தன. … Read more

Indian-origin boy dies after consuming protein drinks | புரதசத்து பானத்தில் எச்சரிக்கை வாசகம்: 16 வயது சிறுவன் பலியானதால் உத்தரவு

லண்டன்: பிரிட்டனில் புரதசத்து பானம் குடித்து 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், அதுபோன்ற பானங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என, அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ரோஹன் கோதானியா என்ற 16 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு, 2020, ஆக., 15ல் அவரது தந்தை புரதசத்து நிறைந்த பானமான, ‘புரோட்டீன் ஷேக்’ வாங்கி தந்தார். அந்த சிறுவனின் உடல்வாகு வயதுக்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இல்லாதததால், உடல் … Read more

9 members of the same family were shot dead in a dispute over a marriage arrangement in Pak | பாக்.,கில் திருமண ஏற்பாட்டில் தகராறு ஒரே குடும்பத்தின் 9 பேர் சுட்டுக்கொலை

பெஷாவர், பாகிஸ்தானில் திருமணத்தை ஒட்டி ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேரை, அவர்களின் உறவினர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பட்கேலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமண வீட்டில் அனைவரும் உறங்கியபோது, அவர்களின் உறவினர்கள் சிலர் உள்ளே … Read more

அரசு கோப்புகளில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாவில் கையொப்பம் – ரிஷி சுனக்கை சுற்றும் புது சர்ச்சை

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திட எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்களை (Erasable ink pen) பயன்படுத்துகிறார் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தி கார்டியன் தினசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் பிரதமர் ரிஷி சுனக் இப்படியான பேனாவை பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.495க்கும், இங்கிலாந்து மதிப்பில் 4.75 பவுண்டுக்கும் கிடைக்கும் `பைலட் வி (Pilot V)’ ஃபவுன்டைன் பேனாவைப் பயன்படுத்தி பிரதமர் ரிஷி அமைச்சரவைக் குறிப்புகள், அரசாங்க … Read more

Erasable ink pen: Complaint against British Prime Minister Rishi Sunak | பேனா சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: அழியக்கூடிய மையால் ஆன பேனாவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்ததால், சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ரிஷி சுனாக் வைத்திருக்கும் போன அழியக்கூடிய மையால் ஆனது எனவும் இந்த பேனாவை பயன்படுத்தி குறிப்புகள் எழுதி வருவதும், அரசு ஆவணங்களில் கையெழுத்திடுவதாகவும், எதிர்கட்சிகள் … Read more

9 people shot dead in the same family in Pakistan | பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தில் 9 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெஷாவர்: பாகிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துன்கவாஹ் மாகாணம் , மாலாகண்ட் மாவட்டத்தில் பாட்கேல்ஹா என்ற கிராமத்தில் திருமண வீட்டில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆத்திரமடைந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பெண்கள், 6 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாயினர். துப்பாக்கியால் சுட்ட நபர் … Read more

Solution to Sri Lanka issue only under Prime Minister Modi regime: Annamalai explanation in British Parliament | பிரதமர் மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு தீர்வு: பிரிட்டன் பார்லிமென்டில் அண்ணாமலை விளக்கம்

லண்டன்: பிரதமர் மோடி ஆட்சியில், இலங்கை பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், எப்போதுமே, யாராலும் தீர்க்க முடியாது என பிரிட்டன் பார்லிமென்டில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பிரிட்டனில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என்பதால், அவர்களின் பிரச்னையை மையப்படுத்தி, பிரிட்டன் பார்லிமென்டில் உள்ள, ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ அரங்கில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று பேசியுள்ளார். அவர் பேசியதாவது: கடந்த, 2014 ஆண்டுக்குப் பின் பிரதமர் மோடி, இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை … Read more