‘ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.” என்று தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிவுடன் அவர்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் தேசிய பத்திரிகையாளர் நாளில் … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் புதுச்சேரியில் சுட்டெரித்தது. இச்சூழலில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது, அவ்வப்போது மழையும் பெய்தது. இதனிடேயே வங்கக் கடலில் அக்டோபர் 27-ம் தேதி மோந்தா புயல் உருவானது. இந்தப் புயல் புதுவையை தாக்கும் என வானிலை மையம் … Read more

பிஹாரில் புதிய அரசு பதவியேற்பு எப்போது? – காந்தி மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்றது. லோக் ஜனசக்தி … Read more

மாண்புமிகுக்களின் ‘மணி’ விஷயம் | உள்குத்து உளவாளி

தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் உள்ள சில பல தொகுதிகளுக்கும் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற அளவுக்கு சில மாண்புமிகுக்கள் ‘மணி’ விஷயத்தில் கொஞ்சம் மதமதப்பாக இருப்பார்கள். அப்படியான மதமதப்பு புள்ளிகளை எல்லாம் லிஸ்ட் எடுத்திருக்கும் டெல்லி தலைமை, சமயம் பார்த்து அவர்களை சுற்றி ‘வளைத்து’ நெருக்கடியை உண்டாக்கத் தயாராக இருக்கிறதாம். முக்கியமாக, ஆன்மிக புகழ்பெற்ற இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு தலைவர்கள் இருவரையும், கரூர் கம்பெனியாரையும் முன்னமே கண்காணிப்பில் வைத்திருக்கிறார்களாம், இந்த இம்சைகள் எல்லாம் … Read more

பிஹாரில் 11 ஆக குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: பிஹாரில் முஸ்​லிம்​கள் சுமார் 20 சதவி​கிதம் பேர் உள்​ளனர். அதன்​படி 45 எம்​எல்​ஏக்​கள் இருக்க வேண்​டும். ஆனால், இந்த முறை 11 முஸ்​லிம்​கள் மட்​டுமே வெற்றி பெற்​றுள்​ளனர். சீமாஞ்​சல் பகு​தி​யில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் அதி​கம். இங்கு அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களை மீண்​டும் பெற்​றுள்​ளது. மேலும், இதர பல பகு​தி​களில் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணிக்​கான முஸ்​லிம் வாக்​கு​களை​யும் ஒவைசி கட்சி பிரித்​துள்​ளது. ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யில் 2020 தேர்​தலில் வெற்றி பெற்ற 5 எம்​எல்​ஏ.க்​களில் … Read more

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: பிஹார் தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. அதனால் அம்மாநில தேர்தல் முடிவுகள் … Read more

பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி விட்​டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் முக்​கிய ஆதர​வாளர்​களான யாதவ் மற்​றும் முஸ்​லிம்​கள் எதிர்க்கட்​சிகளுக்கு வாக்​களிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் முக்​கிய நடவடிக்​கை​யான எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) முதல் மாநில​மாக பிஹாரில் அமலானது. இது தொடர்​பாக காங்​கிரஸ் … Read more

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட உடனே, எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று கூறி … Read more

ராஜேந்திர பாலாஜியை பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார். பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் … Read more

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை 

மதுரை: பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார். உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் சங்​கம் (எம்​பிஏ) சார்​பில், நீதித்​துறை தேர்​வுக்​குத் தயா​ராகி வரும் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் எம்​.கே.சுரேஷ் தலைமை வகித்​தார். செயலர் ஆர்​.வெங்​கடேசன் வரவேற்​றார். பயிற்சி வகுப்​பைத் தொடங்​கி​வைத்து உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் … Read more