டெல்லிக்கு இந்திரபிரஸ்தா பெயர் வைக்க கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் கபில் மிஸ்​ரா​வுக்​கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செய​லா​ளர் சுரேந்​திர குமார் குப்தா எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மகா​பாரதத்​தில் டெல்லி இந்​திரபிரஸ்தா என அழைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே பழங்​கால வரலாறு மற்​றும் கலாச்​சா​ரத்​துடன் தொடர்பு படுத்​தும் வகை​யில் தலைநகர் டெல்லி பெயரை இந்​திரபிரஸ்தா என மாற்ற வேண்​டும். அதே​போல் இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம், டெல்லி ரயில் நிலை​யம், ஷான​கான்​பாத் வளர்ச்சி வாரி​யம் ஆகிய​வற்​றுக்​கும் இந்​திரபிரஸ்தா என்ற பெயரை வைக்க வேண்​டும். பெயர்​கள் … Read more

கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: லத்​தீன் அமெரிக்க நாடு​களில் இருந்து கரீபியன் கடல் வழி​யாக அமெரிக்கா​வுக்கு அதி​விரைவு படகு​கள் மூலம் போதைப் பொருட்​கள் கடத்​தல் நடை​பெற்று வந்​தது. கடந்த 2 மாதங்​களாக போதைப் பொருட்​களை கடத்​திவந்த 6 அதி விரைவு படகு​களை அமெரிக்க படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்​தின. இந்த படகு​கள் வெனிசுலா​வில் இருந்து வந்​திருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது. இந்​நிலை​யில் கரீபியன் கடல் பகு​தி​யில் இரவு நேரத்​தில் ஒரு நீர்​மூழ்கி கப்​பல், பாதி​யளவு தண்​ணீரில் மூழ்​கியபடி வேக​மாக சென்​றுள்​ளது. அதில் … Read more

டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்: ​தான் டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக கூறிக் கொள்​ளும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், டெல்டா பகுதி மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் கூறி​னார். நாகப்​பட்​டினத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அனை​வரும் தீபாவளிப் பண்​டிகையை கொண்​டாட உள்ள நிலை​யில், டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் மட்​டும் தீபாளியை சிறப்​பாகக் கொண்​டாட முடி​யாத நிலை​யில் உள்​ளனர். அரசு கொள்​முதல் கிடங்​கு​கள் போதிய அளவில் இல்​லாத​தா​லும், வழக்​கத்​தை​விட 3-ல் ஒரு பங்கு … Read more

மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு: மலை ரயில் ரத்து

குன்னூர்: மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக 7 இடங்களில் மரங்கள் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் கட்டப்பெட்டு சாலை மற்றும் சோலூர்மட்டம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு … Read more

தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள்

தூத்துக்குடி: தமிழகத்​தில் 26 இடங்​களில் மகளிருக்​கான ‘தோழி’ தங்கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்டு வரு​வ​தாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்​சர் பி.கீ​தாஜீவன் தெரி​வித்​தார். தூத்​துக்​குடி​யில் செய்​தி​யாளர்​களி டம் அவர் நேற்று கூறிய​தாவது: புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ் இதுவரை கலை – அறி​வியல், பொறி​யியல், தொழிற்​படிப்​பு, மருத்​து​வப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவி​கள் பயன் பெற்​றுள்​ளனர். தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின்கீழ் 3,92,449 மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர். ஊட்​டச்சத்தை உறுதி செய் திட்​டத்​தின் கீழ் கடுமை​யான ஊட்​டச்​சத்து குறை​பாடுடைய 75 … Read more

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி: அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக … Read more

குன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு

குன்னூரில் தொடரும் கன மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு தொடர்கிறது. குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ மழை பதிவானது. உழவர் சந்தை அருகே உள்ள, மாடல் ஹவுஸ் பகுதியில் 3-வது முறையாக குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். … Read more

‘உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இங்குள்ள தீபங்கள் சுட்டுகின்றன’ – யோகி ஆதித்யநாத் @ அயோத்தி

அயோத்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சார்பில் தீபோற்சவ விழாவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார். “இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் அங்கம் வகித்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை உடன் ஒப்பிட்டது காங்கிரஸ் கட்சி. முன்னாளில் இங்கு துப்பாக்கி சூடு … Read more

தீபாவளி பண்டிகை: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் … Read more

மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். மேட்டூர் தொகுதிக்கு வீரப்பன் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் மேட்டூரில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ‘வீரபெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “நாட்டை ஆளுகிற ஆட்சியாளர்கள், வெகுவான மக்கள் பார்வையிலே வீரப்பன் … Read more