பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் 

சென்னை: பூர்த்தி செய்த எஸ்​ஐஆர் படிவங்​களை சேகரிக்​கும் அரசி​யல் கட்​சிகளின் வாக்​குச்​சாவடி முகவர்​கள், அப்​படிவங்​கள் வாக்​காளர் பட்​டியலுடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறு​தி​ மொழி அளிக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய தேர்​தல் ஆணைய உத்​தர​வின்​படி தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இதன் ஒருபகு​தி​யாக தமிழகத்​தில் உள்ள அனைத்து சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​காளர்​களுக்கு … Read more

பிஹாரில் 25 அமைச்சர்களில் 24 பேர் மீண்டும் அமோக வெற்றி

பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர். வேளாண் அமைச்சர் பிரேம்குமார், கயா தொகுதியிலிருந்து … Read more

விஜய் மக்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும்: தவெக துணை பொதுச் செயலாளர் தகவல்

திருச்சி: “விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்க உள்ளது. அனைத்து அணிகளையும் வலுப்படுத்தி, வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் சந்திப்பு நடக்கும்” என்று தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் … Read more

அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்புதான்: ஆர்ஜேடி தகவல்

பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2020 தேர்தலில் 75 இடங்களில் … Read more

எஸ்ஐஆர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கலை சரி செய்ய வலியுறுத்தல்!

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் படிவங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை துவங்கி உள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு படிவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களிலும் படிவங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “திருப்பூரில் தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். … Read more

டெல்லி குண்டு வெடிப்​பு: 4 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்​புக்கு பின்​னணி​யில் இருக்​கும் 4 மருத்​து​வர்​களின் அங்​கீ​காரத்தை தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்எம்​சி) ரத்து செய்​துள்​ளது. இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோ​ருக்கு ஐஎம்​ஆர், தேசிய மருத்​து​வப் பதி​வாளர் (என்​எம்​ஆர்) ஆகியோர் வழங்​கிய அங்​கீ​காரத்தை எம்​எம்சி உடனடி​யாக ரத்து செய்து நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.இந்த மருத்​து​வர்​கள் இந்​தி​யா​வின் எந்​தப் பகு​தி​யிலும் மருத்​து​வ​ராகப் பணி​யாற்ற முடி​யாது என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது. Source link

ராகுல் காந்தியை சந்தித்தாரா விஜய்? – செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை மக்கள் தெளிவுப்படுத்துவார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் எஸ்ஐஆருக்கு எதிராக … Read more

‘பிஹார் தேர்தலுக்காக உலக வங்கி நிதி ரூ.14,000 கோடியை தவறாக பயன்படுத்தினர்’ – ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக உலக வங்கியின் நிதி ரூ.14 ஆயிரம் கோடியை மத்திய அரசு எடுத்து பெண் வாக்காளர்களுக்கு விநியோகித்ததாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பவன் வர்மா அளித்த பேட்டியில், “முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் 1.25 கோடி பெண் வாக்காளர்களின் கணக்குகளுக்கு ரூ.10,000 மாற்றப்பட்டது. தற்போது பிஹாரில் பொதுக் கடன் ரூ.4,06,000 கோடியாக உள்ளது. ஒரு … Read more

நவ.19-ல் பிரதமர் மோடி கோவை வருகை: விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோவை: பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையில் இயற்கை வேளாண் மாநாடு நவம்பர் 19,20-ம் தேதிகளில் நடக்கிறது. நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு … Read more

தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி ரோகிணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு திருமணமான பெண்ணாக, ஒரு தாயாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அவதூறான வார்த்தைகளில் வசைபாடினர். என்னை அடிக்க செருப்பு எடுத்துக்கொண்டு பாய்ந்தனர். நான் … Read more