லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் விரை​வில் இடைநீக்​கம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாநில அரசின் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழக​மான அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்று தமிழகத்​தில் 470-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. Source link

என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் … Read more

சென்னையில் பெருமழை அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ‘பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில ஆண்​டு​களாகவே நவம்​பர், டிசம்​பர் மாதம் வந்​தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்​வொரு நாளை​யும் அச்​சத்​துடன் கடக்க வேண்​டிய அவலநிலை ஏற்​பட்​டுள்​ளது. கோடை​யில் தண்​ணீர் பற்​றாக்​குறை​யும், மழைக்​காலத்​தில் வெள்​ள​மும் சென்​னை​யில் வழக்​க​மாகி​விட்​டது. Source link

பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு​ மகள் ரோஹிணி ஆச்​சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார். இதற்கு சகோ​தரன் தேஜஸ்​வி​யின் நெருங்​கிய நண்​பர்​கள் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் காரணம் என்​றும் குற்​றம்சாட்டி உள்​ளார். ஆர்​ஜேடி.​யில் அந்​தளவுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ரமீஸ், சஞ்​சய் ஆகியோர் யார்? கடந்த 2 ஆண்​டு​களாக தேஜஸ்​வி​யின் அரசி​யல் குழு​வில் ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ் ஆகியோர் முக்​கிய​மானவர்​களாக உள்​ளனர். உ.பி. பல்​ராம்​பூரைச் சேர்ந்​தவர் ரமீஸ். இவரது … Read more

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்

திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் வ.உ.சியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்ட பேரவை தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பவர்கள் வஉசியை முன்மாதிரியாக எடுத்துக் … Read more

ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) கட்​சி​யின் தலை​வர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக அவர் கடந்த மாதம் சட்​டையை கிழித்​துக்​கொண்டு அழுது தனது விரக்​தியை வெளிப்​படுத்​தி​னார். மேலும், ஆர்​ஜேடி கட்சி 25 இடங்​களுக்கு மேல் தேறாது என்ற சாபத்​தை​யும் வழங்​கி​னார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்​தைப் போலவே ஆர்​ஜேடி 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. Source link

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: ஸ்டான்லி மருத்துவர் கணேஷ் அறிவுறுத்தல்

சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவ.15-ம் தேதி முதல் நவ.21-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. Source link

நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்கை விசா​ரிக்​கும் என்ஐஏ அதி​காரி​கள் கூறிய​தாவது: ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா மருத்​து​வ​மனை​யில் உமர் நபி மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அங்கு சக மருத்​து​வர்​கள் கைது செய்​யப்​பட்ட நிலை​யில் உமர் நபி தலைமறை​வா​னார். இதன்​பிறகு ஹரி​யா​னா​வின் நூ நகரில் அவர் 10 நாட்​கள் பதுங்கி இருந்​துள்​ளார். அங்கு ஹிதா​யத் காலனி​யில் உள்ள வீட்​டில் அவர் தங்​கி​யிருந்து உள்​ளார். இந்த வீடு, அல் பலா மருத்​து​வ​மனை ஊழியர் சோகிப்​பின் உறவினர் வீடு … Read more

மீனாட்சியம்மன் கோயில் பிரசாத பொருட்கள் விலை உயர்வு: திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்படுகிறது. Source link

மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி வாழ்கிறார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்

மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “பிஹாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார். ஒருவரின் குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கருத்து … Read more