‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு

தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை … Read more

ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

விசாகப்பட்டினம்: ​ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் கடந்த 2 நாட்​களாக இந்​திய தொழில் கூட்​டாண்மை மாநாடு நடை​பெற்​றது. இதனை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார். மாநாட்​டில் இந்​தியா மற்​றும் 72 நாடு​களின் தொழில​திபர்​கள், தலைமை நிர்​வாகி​கள் மற்​றும் இயக்​குநர்​கள் கலந்​து​கொண்​டனர்.நிறைவு நாளான நேற்று முதல்​வர் சந்​திர​பாபு பேசி​ய​தாவது: தொழில் கூட்​டாண்மை மாநாட்​டில் சுமார் ரூ.13 லட்​சம் கோடி வரை ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய தொழில​திபர்​கள் முன் வந்​துள்​ளனர். நாங்​கள் ஆட்​சிக்கு வந்த கடந்த 18 மாதங்​களில் … Read more

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார். இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று … Read more

114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், துமகூரு மாவட்​டம் குப்​பியை அடுத்​துள்ள குனிகலை சேர்ந்​தவர் சாலுமரத திம்​மக்​கா(114). திரு​மண​மாகி குழந்தை பாக்​கி​யம் அமை​யாத​தால் தனது கணவருடன் இணைந்து கர்​நாடக மாநிலம் முழு​வதும் பயணம் செய்து லட்​சக்​கணக்​கான மரங்​களை நட்​டார். இதனால் மரங்​களின் தாய் என சாலுமரத திம்​மக்கா அழைக்​கப்​பட்​டார். இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்​திய அரசு பத்​மஸ்ரீ விருது வழங்​கி​யுள்​ளது. முது​மை​யின் காரண​மாக திம்​மக்கா பெங்​களூரு​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். இதைத்​தொடர்ந்து … Read more

பெண்கள் மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் – ஜி.கே.வாசன் நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலம் வரும்போது மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமி, மாநிலம் முழுவதும் … Read more

லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு 

பாட்னா: ​ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து வில​கு​வ​தாக லாலு​வின் மகள் ரோகிணி பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத், ரப்ரி தம்​ப​தி​யருக்கு 7 மகள்​கள், 2 மகன்​கள் உள்​ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிர​தாப், மிசா பார​தி, ரோகிணி ஆகியோர் அரசி​யலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். Source link

தமிழக வரலாற்றை ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இயங்கி வரும் பழமை​யான தமிழ்நாடு ஆவணக் காப்​பகத்​தில் 1633-ம் ஆண்டு முதலான புத்​தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமை​யான ஆவணங்​களும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. Source link

டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்: டெட் டிராப் இ-மெயில் பயன்படுத்திய தீவிரவாதிகள்

புதுடெல்லி: டெட் டிராப் இ-மெ​யில்​களை தீவிர​வா​தி​கள் பயன்​படுத்​தி​யது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்​டு​வெடிப்​பில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. Source link

“அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 … Read more

100 தோப்புக் கரணம் போட்டதால் 6-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று முன்தினம் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தோளில் புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது. இதனால் வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் … Read more