தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை ​கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

காட்​பாடி: வேலூர் மாவட்​டம் காட்​பாடி காந்தி நகர்ப் பகு​தி​யில் உள்ள இல்​லத்​தில் நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமை​யைத் தமிழக அரசு விட்​டுக்​கொடுப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​கின்​றனர். அவர்​களின் இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்​குப் பதில் அளிக்க முடி​யாது. யார் முயற்சி செய்​தா​லும், உச்ச நீதி​மன்​றமோ அல்​லது காவிரி ஒழுங்​காற்று ஆணை​ய​மாகக்​கூட இருந்​தா​லும் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசால் … Read more

2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும்! –  பிரேமலதா நம்பிக்கை

வரும் 2026 தமிழக அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறும் வாய்ப்பு உருவாகும் என்று பிரேமலதா தெரிவித்தார். தேமுதிகவின் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப் பயணத்தின் 3-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தொடங்கினார். முன்னதாக, மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் கூடல்நகரில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: டிச. 28-ல் விஜயகாந்த் குருபூஜையும், ஜன. 9-ல் கடலூரில் கட்சி மாநாடும் நடக்கிறது. தமிழகம் முழுவதும் மற்ற … Read more

பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல்

சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் நெமிலியில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: மதுப் பழக்கத்தை ஒழித்தால்தான் சமுதாயமும், நாடும் முன்னேறும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். ஏழைக்கு ஒரு கல்வி, நடுத்தர மக்களுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்பதுபோல கல்வியின் நிலைமை உள்ளது.வன்னியர்களுக்கு மட்டுமின்றி … Read more

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சா? – இல்லவே இல்லை என்கிறார் செல்வப்பெருந்தகை

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிஹார் தேர்தல் வெற்றியால் பாஜக மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில தொண்டர்களுக்கு இந்த வெற்றியால் புது சக்தி கிடைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பார்வை அடுத்ததாக தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. Source link

கதர் கட்சி மீது நம்பிக்கை இழந்த பனையூர் லீடர்? | உள்குத்து உளவாளி

பிஹார் தேர்தல் முடிவுகள் கதர் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால் அந்தக் கட்சி தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் பனையூர் தலைவரின் கட்சி. பிஹார் தேர்தல் முடிவுகள் வரட்டும் என்பதற்காகவே, வேட்பாளர் தேர்வு, மாற்றுக் கட்சியினர் சேர்ப்பு நிகழ்வுகளை தள்ளிப் போட்டிருந்த தலைவர், தற்போது அதற்கான வேலைகளை வேகப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம். அதன்படி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள் பனையூர் கட்சியின் பொறுப்பாளர்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களின் … Read more

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்? 

குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வெற்றிக்கு வியூகம் வகுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அவருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது பிஹார் தேர்தல் முடிவு. சொந்த மாநிலமான பிஹாரில் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஜன் சுராஜ் கட்சி சார்பில் 238 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கினார். 150 இடங்களில் … Read more

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்ததால் விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுத்தார். அமைச்சர் அந்தஸ்தில் அமர்ந்திருந்தபோது ஸ்டாலினை கடுமையாக ஒருமையில் … Read more

“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நேர்காணல்

பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அளித்த பேட்டியில் கூறியதாவது: பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இமாலய வெற்றிக்கு எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே? Source link

7 இடங்களில் சிறப்பு முகாம் 2,500 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தம்

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 7 இடங்​களில் நேற்று நடை​பெற்ற ரேபிஸ் நோய் தடுப்​பூசி முகாமில் 2,552 செல்​லப் பிராணி​களுக்கு தடுப்​பூசி செலுத்​தி, மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​கள் வளர்ப்​ப​தற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக தங்​கள் விவரங்​களை பதிவு செய்​து, ரேபிஸ் நோய் தடுப்​பூசி போட்​டுக்​கொண்​டு, மைக்ரோ சிப் பொருத்​திக்​கொள்ள வேண்​டும். செல்​லப் பிராணி உரிமை​யாளர்​கள் வலை​தளத்​தில் … Read more

அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு தள்ளிவைப்பு

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (SIR) ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி நிகழ்த்​தப்​படும் பல்​வேறு முறை​கேடு​களுக்கு காரண​மான திமுக அரசுக்கு எதி​ராக இன்று (நவ.17) ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. Source link