கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" – எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்தில் இப்பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக தொண்டரான அர்ஜுன் (33) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் பழனிசாமி, “அதிமுகவிற்காக பல ஆண்டுகள் உழைத்த … Read more