காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! – பரபர அப்டேஸ்!

இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்களை மாற்றி மாற்றி பயணித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார். செங்கோட்டையன் நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் தங்கியிருந்தார். காலையில் 8:30 மணிக்கு இனோவா ‘TN09 CE 9393’ நம்பர் ப்ளேட் கொண்ட காரில் கிளம்பினார். மீடியாக்கள் வட்டமடிப்பதைப் பார்த்து யூடர்ன் போட்டு … Read more

கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் – வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வரகழியாறு மரக்கூண்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. ரோலக்ஸ் யானை இதையடுத்து கடந்த நவம்பர் 12 ம் தேதி அந்த யானை மந்திரி்மட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் ரோலக்ஸ் யானை திடீரென்று உயிரிழந்த சம்பவம் … Read more

`சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களான்னு தெரியல'- இயக்குநர் லிங்குசாமி

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2014ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவ.28ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் நேரம் 36 நிமிடம் குறைக்கப்பட்டு, நடிகர் சூரியின் காட்சிகள் நீக்கப்பட்டு, திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டு, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார். ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் “சூர்யா படங்கள டார்கெட் பண்றாங்களா?” இன்று சென்னையில் நடைபெற்ற ‘அஞ்சான்’ ரீ ரீலிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய … Read more

கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி அருகேயுள்ள  காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும்  தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு என்பவர், “என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம்” எனக்கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.   கொலையாளி கோமு- கொலை செய்யப்பட்ட மந்திரம் & முருகன் அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே மறைத்து … Read more

மாதம் ரூ.1 – ரூ.3 லட்சம் பெறுவது எப்படி? – வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசத்தல் Financial Planning!

துபாய், குவைத், ஓமன், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகம் முழுக்க பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். பல்வேறு நாடுகளில் பல்வேறு வேலைப் பார்த்து, கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் இவர்களில் பலர், தாய் நாடான இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரும் 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் … Read more

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் தான்" – நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி!

ஜெயராம் மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் வலம் வருபவர்.  மலையாளத்தில் 1986-ல் “அபரன்” என்ற படத்துடன் ஆரம்பித்த அவரது திரைப்பயணம். தமிழ் திரையுலகிற்கு 1992-ஆம் ஆண்டு ‘கோகுலம்’ படம் மூலம் பிரபலமானார். தமிழில் ‘தெனாலி’, ‘துப்பாக்கி’, ‘உத்தம வில்லன்’, ‘பஞ்சதந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கும்பகோணம், சிதம்பரத்தில் நடிகர் ஜெயராம் “தூய்மைப் பணியாளர் பிரச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும்” – ஆதவ் … Read more

BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிருக்கலாம். இந்த சீசன் தொடங்கியது முதலே போட்டியாளர்கள் அந்த வீட்டில் நடந்து கொள்ளும் விதம் வெளியில் உள்ளவர்களால் விமர்சிக்கப்பட்டே வந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங்கில் வெடித்து விட்டார் விசே. விஜய் சேதுபதி `பிக் பாஸ் ஏதாவது சொன்ன கேக்க மாட்டேங்குறீங்க’, `டாஸ்க் … Read more

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ – கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள மணிகண்டனுக்கு தன்னுடைய மனைவி சரண்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சரண்யா, யாருடனோ அடிக்கடி செல்போனில் ரகசியமாக பேசி வந்திருக்கிறார். அதைக் கவனித்த மணிகண்டன், மனைவி சரண்யாவை பலமுறை கண்டித்திருக்கிறார். அதனால் … Read more