"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" – தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர் “CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் … Read more

Europe: விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் மரபணு; 197 குழந்தைகளின் நிலை என்ன? 

உலகம் முழுக்க குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதால், அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும் முன்னேறிக்கொண்டே வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் விந்தணு தானம். வெளிநாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையில், விருப்பமுள்ள ஆண்கள் தங்கள் விந்தணுக்களை தானமாக வழங்குவர், குழந்தையின்மை பிரச்னை உள்ள பெண்கள், தங்களுடைய கணவருக்கு விந்தணுக்களில் பிரச்னை உள்ள பெண்கள் முகம் தெரியாத ஓர் ஆணின் விந்தணுக்களைப் பெற்று  கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வார்கள். விந்தணு தானம் கடந்த 17 வருடங்களாக விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார்! … Read more

வா வாத்தியார்: “நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' – கார்த்தி

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தி- கீர்த்தி ஷெட்டி இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் கார்த்தி, … Read more

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ரகசிய திருமணம்; பிரிட்டன் குடும்பத்தோடு தொடர்புடைய பூஜா தியோல் யார்?

சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான அடுத்த ஆண்டே ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவர் அந்நேரம் காதல் படங்களில் அதிக அளவு நடித்து வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். சன்னி தியோல் 1984ஆம் ஆண்டு லண்டனில் லிண்டா தியோல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். … Read more

29 : " 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன், ஏன்னா.!"- ஷான் ரோல்டன்

‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ’29’ படத்தை இயக்கியிருக்கிறார். விது – ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ’29’ இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஷான் ரோல்டன், ” என்னுடைய 29 வயதில் நான் எந்தப் … Read more

`போருக்கு பின் பைக் சாகசங்கள்' – பாலஸ்தீன இளைஞர்களின் தொடக்கம்

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மனிதநேயமற்ற தாக்குதலைக் கண்டு உலகமே பரிதாபப்படுகிறது. இந்தத் தாக்குதல் மக்களின் வாழ்வாதாரத்தோடு உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் தப்பி வாழும் மக்களையும் மீண்டும் மேலே எழும்பவிடாமல் தடுக்கப்படுகிறது. இருந்தும் பாலஸ்தீன மக்கள் தங்களது முயற்சிகளை கைவிடவில்லை. தொடர்ந்து அவர்கள் தங்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். பைக் சாகசம் – சித்தரிப்பு படம் US: `H-1B visa’ மீண்டும் … Read more

" 'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!"- கார்த்தி

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தி- கீர்த்தி ஷெட்டி இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் கார்த்தி, … Read more

முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' – அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்

வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித – புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக்கில் கால்நடைகளை வேட்டையாடி வந்த இளம் ஆண் புலி ஒன்றை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அண்மையில் விடுவித்தனர். கூண்டுக்குள் சிக்கிய புலி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவநல்லா பகுதியில் கடந்த மாதம் 24- ம் தேதி ஆடு … Read more

"நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!" – `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி

`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே இருக்கும் சுடலையாக நடித்து பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை அள்ளி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அங்கம்மாள் திரைப்படம் மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு! “வணக்கம்ங்க, எனக்கு மறுபடியும் இந்தப் படம் பிரேக்னு சொல்லலாம். நான் என்னுடைய கரியர்ல நிறைய விஷயங்களை தவறவிட்டிருக்கேன். கிட்டத்தட்ட 12 படங்களை ஹீரோவாக நடிக்க வேண்டியது. … Read more

டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education – CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 124 வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது மாறுபடுகிறது. சம்பளம்: ரூ.35,400 சி.பி.எஸ்.இ | வேலைவாய்ப்பு | CBSE Career: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் … Read more