`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு ஒதுக்கிய நிதியில் கட்டிகொடுத்திருக்க வேண்டிய வீடுகளை ரூ. 6,43,000 பணம் கட்டி வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியிருந்த தகவல் பாதிப்படைந்த மக்கள் தலையில் இடியாக வந்து விழுந்தது. மொத்தமாக இவ்வளவு பணம் கட்ட முடியாது என்றும் தவணை முறையில் கட்டுவதாகவும் 2022-ஆம் ஆண்டு … Read more

Arasan: முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி; `மதுரை டு வடசென்னை' – அசத்தலான செட்டப்

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. மலேசியாவில் ‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் … Read more

வேலை வாங்கி தருவதாக கூறி திருமணம்; சொன்ன சொல்லை காப்பாற்றாத கணவன் – கபடி வீராங்கனை விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் கிரன் சூரஜ்(29). இப்பெண் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாவார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் நிதி நெருக்கடியில் கஷ்டப்பட்டார். இதனை தெரிந்து கொண்ட ஸ்வப்னில் என்பவர் கிரனுக்கும், அவரது சகோதரனுக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறினார். அதோடு கிரன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதனை கிரன் ஏற்றுக்கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு ஸ்வப்னிலை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் ஸ்வப்னில் சொன்னபடி கிரனுக்கோ அல்லது … Read more

TVK: `இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமா புதுச்சேரி?’- விஜய் குற்றச்சாட்டு உண்மையா?

 புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்’ என்று பேசியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், `புதுச்சேரி, காரைக்காலை விஜய் எப்போது சுற்றிப் பார்த்தார்? இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகூடத் தெரியாமல் விஜய் … Read more

வா வாத்தியார்: “ஷூட்டிங் செட்ல அசந்து தூங்கிட்டேன்… அப்போ" – கீர்த்தி ஷெட்டி

நடிகர் கார்த்தி 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தின் ப்ரீ … Read more

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" – கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது. Ind vs SA இந்நிலையில் … Read more

வா வாத்தியார்: “கீர்த்தி கீர்த்தின்னு கூப்பிடும்போது கோவம் வரும்" – நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு … Read more

நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?

நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார். சரவணபாபு இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும … Read more

வா வத்தியார்: “MGR சென்ட்ரல்; 5,000 முறை அவர் பெயர் சொல்லப்படுது"- நெகிழ்ந்த நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு … Read more

மறைந்த கணவர் தர்மேந்திராவிற்கு டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டம் – ஹேமமாலினி

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாத இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தனது 89வது வயதில் காலமான நிலையில் தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் இணைந்து கடந்த மாதம் 27ம் தேதி மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் ஹேமமாலினியோ அல்லது அவரது மகள்களோ கலந்து கொள்ளவில்லை. தர்மேந்திராவின் பிரார்த்தனை கூட்டதில் கலந்துகொண்டவர்கள் ஹேமமாலினியின் … Read more