ஜனநாயகன் சென்சார் : `மறு தணிக்கை; நிர்பந்திக்க முடியாது' – நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.டீ.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் … Read more

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் டிரோன் கேமிராக்கள் உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் டிரோன் எனப்படும் இரவில் உயிரினங்களை அடையாளம் காணும் கேமிராக்கள் மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிந்து கண்காணிக்கத் தொடங்கினர்‌. உயிரிழந்த இளம் ஆண் … Read more

CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? – முழு விவரம்!

தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி ‘ஜனநாயகன்’ படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. Jana Nayagan – Vijay தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் … Read more

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, … Read more

“ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க… இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வலுவாக எழுந்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுக-வுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூரின் “அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்ற கருத்து பரபரப்பைக் கிளப்பியது. மாணிக்கம் … Read more

"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" – விக்ரமன் பகிர்ந்த வீடியோ

‘உன்னை நினைத்து’ படத்தில் இடம் பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் ‘உன்னை நினைத்து’ படத்தில் இடம் பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” சமீபத்தில் மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் தூண் அரசின் மேல் முறையீடு இந்த உத்தரவு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இன்று ( ஜன.6) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை … Read more

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெளியில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. சுஷாஷ் குமார் மனைவி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது, சமையல் அறையில் திருடன் ஒருவன் மாட்டி இருந்தான். சமையல் அறையில் எக்ஸாஸ் பேன் மாட்டுவதற்காக துளை ஒன்று போடப்பட்டு இருந்தது. … Read more

பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? – ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!

வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர். தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது. பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் … Read more

BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்

இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார்.  மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது.  BB TAMIL 9 DAY 92 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 92 ‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று … Read more