அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா – என்ன நடக்கிறது?

வரி… பிரச்னை… சமாதானம்… ரிப்பீட்டு – இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா – சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது… அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின… இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப் ‘இன்னும் 9 நாள்கள் தான்’ SIR … Read more

"இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது"- சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ படம் … Read more

`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

நேற்று உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி சூர்யா காந்த். தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே நாளில் வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார் சூர்யா காந்த். அந்த உத்தரவு படி, இனி வழக்குகளை ‘அர்ஜென்ட் லிஸ்டிங்’ செய்ய முடியாது. அர்ஜென்ட் லிஸ்டிங் என்றால் என்ன? ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் எந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் இல்லாத வழக்குகள் அன்று விசாரிக்கப்படாது. ஆனால், அர்ஜென்ட் லிஸ்ட் செய்யப்படும் வழக்குகளின் விசாரணை … Read more

AK64: `பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன்’ – அஜித் உடனான அடுத்த படம் குறித்து ஆதிக்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து ‘பகீரா’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது அஜித்தை வைத்து ‘AK64’ படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிக் ரவிச்சந்தின் அஜித்தை வைத்து இயக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் “படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது. … Read more

காஞ்சிபுரம்: மனைவியைக் கொலை செய்த கணவர்; சிக்கிய கணவர் – தவிக்கும் இரண்டு குழந்தைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கங்காதரனுக்கும் அவரின் மனைவி நந்தினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மணிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சாலமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நந்தினி சென்றார். அப்போது மனைவியைத் தேடி கங்காதரன் அங்கு வந்தார். மதுபோதையிலிருந்த கங்காதரன், மனைவியின் … Read more

Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி – அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ‘மாஸ்க்’ பட விழாவில் ”வரும் 24ம் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது” என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் … Read more

`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் – சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு வரும் பயணிகளில் பெரும்பாலோர் தொழில்கள், வேலைகள், சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவாக இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும். amai kunchukal அப்படியே, சர்வதேச நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் … Read more

ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்

பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா… ஆனால் ஒரு தலத்தில் பெருமாள் மட்டுமல்ல கருடாழ்வார், தாயார் ஆகியோரும் சிம்ம முகத்தோடு காட்சி அருள்கின்றனர். மேலும் இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிப்பது சிறப்பு. அதனாலேயே இதை தட்சிண அஹோபிலம் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் திவ்ய தேசங்களுக்கு இணையான மகிமையும் பெருமையும் வாய்ந்த அந்தத் தலத்தை … Read more

“டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' – நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுகவை துண்டு துண்டாக்கியுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக … Read more

Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி – குவியும் வாழ்த்துகள்!

வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கபடி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடிக் குழு சீன தைபே அணியை 35–28 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணி தொடர்ந்து இராண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்வது குறிப்பிடத்தக்கது. India won women’s Kabaddi World Cup இந்த வெற்றி குறித்து இந்திய (ஆண்கள்) அணியின் முன்னாள் கேப்டன் அஜய் தாக்கூர், “டாக்காவில் நடந்த உலகக் கோப்பையை மகளிர் … Read more