ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album

இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் … Read more

கோவை அடுக்குமாடி குடியிருப்புக் கொள்ளை சம்பவம் – சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் கொள்ளை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பார்த்திபன் என்கிற காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி … Read more

`ஆடின்னே இருப்போம்' – கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; சதத்துடன் மாஸ் காட்டிய கோலி – ஹைலைட்ஸ்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஏமாற்றம் தந்தாலும் அதன் பிறகு இணைந்த கோலி – ரோஹித் கூட்டணி, தென்னாப்பிரிக்கா பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த வேளையில் ரோஹித்தின் (47) விக்கெட்டின் மூலம் இக்கூட்டணியை உடைத்தார் மார்கோ யான்சென். Rohit, Kohli நீண்ட … Read more

“உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது"- அமைச்சர் ஜெய்சங்கரின் 'அபாய குறியீடு' உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல… அமைச்சர் ஜெய்சங்கர் சமகால வர்த்தக … Read more

`செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க!'- கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டம் கோபிசெட்டிபாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். … Read more

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தப் பதபதைக்க வைக்கும் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் பேருந்து விபத்து இதுவரை 11 … Read more

கர்நாடகா: புகையும் `ரகசிய ஒப்பந்தம்' – மறுக்கும் ஆளும் தரப்பு – என்ன நடக்கிறது?

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமானாதப்படுத்தியே தேர்தலை நடத்தி முடித்திருந்தது. அப்போதே இருவரும் 5 ஆண்டுகள் ஆட்சியை சரிசமமாக பிரித்து ஆட்சி செய்துகொள்ளலாம் என ‘ரகசிய ஒப்பந்தம்’ மூலம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா தலைமையிலான அரசு 2.5 … Read more

Andre Russell: "வேறு ஜெர்சியில் என்னைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது" – IPL-ல் இருந்து ஓய்வு

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல். 2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து 12 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2026ம் ஆண்டுக்கான சீசனில் ரசலை ஏலத்திற்காக வெளியிட்டது கேகேஆர் அணி நிர்வாகம். இதனால் அவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிற அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே … Read more

"மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில – இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும். உடன் இருக்கும் ஒருவராக அவர்கள் திரையில் தோன்றி அப்படைப்புகளை இன்னும் நமக்கு நெருக்கமாக்கி விடுவார்கள். அந்த மக்களும் இன்று அழுத்தம் தரும் நடிகர்களாக மாறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். Mari Selvaraj & Dhruv அவர்களுள் புளியங்குளம் கண்ணன் … Read more

ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் நிற்காமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லவில்லை. தொடர் மழை ஆடுகள் உயிரிழப்பு … Read more