Sai pallavi:“மரியாதையான, சிறந்த நடிகை" – சாய் பல்லவி குறித்து நடிகர் அனுபம் கெர் பாராட்டு

கோவாவில் நடந்து வரும் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். View this post on Instagram அப்போது சாய் பல்லவியுடன் நடிகர் அனுபம் கெர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். … Read more

"ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார்" – அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது. குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ”ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அமிதாப்பச்சன் இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட … Read more

TVK Vijay: “விஜய் வாக்குறுதிகள்: முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்" – ஜெயக்குமார் பதில்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இதயக்கனி. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது. இப்போதும் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். … Read more

கவிஞர் பொன்மணி | கொடைக்கானலில் சுவாமி நிகழ்த்திய அற்புதம் | Sathya Saibaba 100th BirthDay Special

சத்தியசாய்பாபாவின் அவதரித்த 100 தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் பெருமைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார் கவிஞர் பொன்மணி. 100th Day of Sathya Sai Baba’s Divine Advent | Special Discourse by Poet Ponmani The 100th Day Celebration of Bhagawan Sri Sathya Sai Baba’s Divine Advent is being observed with great devotion around the world. On this auspicious … Read more

அதிமுக ஒன்றிணைப்பு: "செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன்" – ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. SIR ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. … Read more

'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' – கு.பாரதி குற்றச்சாட்டு!

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார். போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி … Read more

குரலில் இனிமை… செயலில் வியூகம்! – குயில்களின் சுவாரஸ்யமான உலகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் “குக்கூ…” என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய … Read more

நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் – கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரு மாதத்தில் அறுவடைக்கு வரும் நிலையில் உள்ளன. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் அறுவடை நிலையில் உள்ளதால் … Read more

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! – என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை … Read more

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.! Source link