IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனமானது நாள் ஒன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதில் நேற்று முன்தினம் (டிசம்பர் 2) மட்டும் சரியான நேரத்துக்குப் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை 35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொன்னால் 1,400 விமானங்கள் … Read more

IND vs SA: `358 அடிச்சும் பத்தல' சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, டெம்பா பவுமா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார். Ruturaj Gaikwad அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில் அரைசதமடித்த ரோஹித் … Read more

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் … Read more

“ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை" – எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில … Read more

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் – லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

 சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் பிரியங்காவை கொலை செய்தது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் எனத் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள்  தெரியவந்தது.  இதுகுறித்து நம்மிடம் பேசிய மணலி போலீஸார், “பிரியங்காவை அவரின் தாய்மாமா ராஜாவுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு … Read more

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ – விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை … Read more

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து… தற்போது வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் மெல்ல நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இது இன்னமும் வலுவிழுந்து குறைந்த அழுத்த பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மழை வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் … Read more

Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" – கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் – சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி … Read more

Vikatan Digital Award: “அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' – தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் ‘விகடன் டிஜிட்டல் விருதுகள் – 2025’ கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன் விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழ்ச்செல்வன், “சுட்டி விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினதுல இருந்து ரெண்டாம் க்ளாஸ் படிக்கும்போது கம்யூட்டர் க்ளாஸ் சேர்த்துவிட்டது வரைக்கும் எல்லாமே என் அப்பா தான் பண்ணாரு. எங்க அப்பா கமல் சாரோட மிகப்பெரிய ரசிகர். அப்படி ஒரு ரசிகரை பார்க்க முடியாது, … Read more

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் – திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.  முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 58 பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் … Read more