புத்தாண்டு காலத்தில் பொருட்களை தாமதிமின்றி விநியோகிக்க மத்திய தபால் பரிவர்த்தனை நடவடிக்கை

• ஏப்ரல் 12 ஆம் திகதியும் தபால் சேவை இடம்பெறும் – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார. புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்கும் நோக்கில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளிலும், கடமையில் ஈடுபடுவதற்கு அனைத்து தபால் ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் புத்தாண்டுக் காலத்திலும் எரிபொருள் வரிசையில் நின்ற மக்கள் இந்த … Read more

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து கவனம் – அரசாங்கம் அறிவுறுத்தல்

• 2024 ஆம் ஆண்டில் அதிவேக வீதியில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு. • வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் 24 மணித்தியாலமும் 1955 அவசர இலக்கதிற்கு அறிவிக்கலாம். • அதிவேக வீதி விபத்துக்களை மட்டுப்படுத்த சாரதிகள் ஓய்வுக்கான இடமொன்று அறிவிக்கப்படும். எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% விபத்துகள் ஏற்படுவதாகவும், … Read more

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

பன்னெடுங் காலமாக, இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் ரமழான் காலத்தில் சமயக் கிரியைகள் மற்றும் இறை தியானங்களில் ஈடுபட்டு, அடுத்த மனிதர்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்து நாட்டின் கலாசார மற்றும் சமய பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை வழங்குகிறார்கள். நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகள், வர்த்தகத் துறைகள், கல்வி மற்றும் பல்வேறு தொழிற் துறைகள், விளையாட்டு மற்றும் கலாசாரத் துறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் செயற்திறமான பங்களிப்பிற்காக இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து … Read more

சதொச அத்தியாவசியப் பொருட்கள் சில இன்று முதல் குறைந்த விலையில்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

புழுதியாறு ஏற்று நீர் பாசனத் திட்ட புனரமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் புழுதியாறு குள ஏற்று நீர் பாசனதிட்ட புனரமைப்பு தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் குறித்த திட்ட புனரமைப்புக்கான அனுமதியை வடக்கு மாகாண சபையிடம் பெறுவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன்பகுதியில் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டு, இப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகாணுதல் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

புத்தாண்டு காலத்தில் விசேட அஞ்சல் விநியோக சேவை

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் விநியோகிப்பதற்கான விசேட சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தபால்ஃதுணை தபால் நிலையங்கள் மூலம் Cash-on-Delivery, வெளிநாட்டு கூரியர் சேவை மற்றும் பார்சல் விநியோகம் ஆகிய விசேட சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

நாட்டைக் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கு உரிய முறைமை அமைக்கப்படாவிட்டால் நாட்டு மக்கள் நீண்ட காலம் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் மின்சார சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மின்சார சபைக்கு நட்டம் … Read more

சுப நேரத்தில் ஒரு மரம் – தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல் வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய ஏப்ரல் 18 திகதி மலரும் தேசிய மரநடுகை சுபநேரத்தில் (காலை 6.16) உணவுப் பெறுமதியுள்ள பல்பருவப் பயிரை நடுகை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (08.04.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு: 14. ‘சுப நேரத்தில் ஒரு மரம்’ – தேசிய மரநடுகைத் திட்டம் 2024 ஆண்டுக்குரிய புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய … Read more

எரிவாயு, மின்சாரம், டொலர் குறைந்துள்ளது – மரக்கறிகளின் விலையிலும் குறைவு – பந்துல குணவர்தன

ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எரிவாயு, மின்சாரம், டொலர் என்பன கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும், மரக்கறிகளின் விலையும் ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்காலத்தில் தம்புள்ளை, மீகொட, வெலிசறை, வெயங்கொடை ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதுடன், 1 கிலோ … Read more