ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை மாற்றம்!

சென்னை:  தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அதை ஏற்று திமுக அரசு தேர்வு தேதிகளை மாற்றி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, முன்கூட்டியே ஆண்டிறுதி தேர்வை நடத்தும் வகையில்,  பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு … Read more

What to watch on Theatre & OTT: ஆடுஜீவிதம், கா, Hot Spot – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ஆடுஜீவிதம் (மலையாளம்/தமிழ்/இந்தி) ஆடுஜீவிதம் மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கா – The Forest … Read more

‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’! பிரதமர் மோடி டிவிட்..

டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில்,  ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உட்பட 600 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர், அதில் அரசியல் வழக்குகளில், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது மற்றும் “அற்பத்தனமான தர்க்கம் மற்றும் பழமையான அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் … Read more

Doctor Vikatan: திடீர் வாய்வுப்பிடிப்பு, அஜீரணம்…. உடனடி நிவாரணம் தருமா வீட்டு வைத்தியங்கள்?

Doctor Vikatan: திடீரென ஏற்படும் வாய்வுப்பிடிப்பு, அஜீரணத்துக்கு  ஆண்டாசிட்ஸ்  (antacids) எடுத்துக்கொள்வது தான் தீர்வா? உடனடி நிவாரணத்துக்கு உதவக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்கள் சொல்ல முடியுமா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் Doctor Vikatan: மனநல பிரச்னைகளுக்கான மருந்துகள்… ஆயுள் முழுவதும் தொடர வேண்டுமா? செரிமானத்துக்கான ஆண்டாசிட்ஸ் (antacids ) மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். முந்தைய காலத்தில் எல்லாம், செரிமானப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதளவு சீரகத்தையோ, சோம்பு, ஓமம் போன்றவற்றையோ  நீரில் … Read more

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

திருப்பூர் தேர்தல் பறக்கும் படையினர் கோவிலில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் ரூ1.5 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குணசேகர் தலைமையில் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்கப் பெண் மது போதையில் இருந்ததோடு இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். இது குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தார்.பெண்ணிடம் இருந்த பணத்தை வாங்கி … Read more

நாடாளுமன்ற தேர்தல்: 31-ந்தேதி கூடுகிறது காங்கிரஸ் தேர்தல் கமிட்டி

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில் 208 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி வருகிற 31-ந்தேதி கூடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், தேர்தல் … Read more

சண்முகம் பெயரில் 9 பேர்… அதில் ஒருவர் திமுக வட்டச்செயலாளர் – என்ன நடக்கிறது வேலூர் தொகுதியில்?!

வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 50 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. மீதமிருந்த 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான தி.மு.க-வின் கதிர் ஆனந்த், பா.ஜ.க-வின் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க-வின் பசுபதி, நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனால், நான்கு முனைப் போட்டியைச் சந்திக்கிறது வேலூர் களம். இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்துவதற்காக ‘பெயர் அஸ்திரத்தை’ கையிலெடுத்திருக்கிறார்கள். இதன் … Read more

நாட்டையே உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு… ஒருவர் கைது – என்.ஐ.ஏ. அதிரடி

பெங்களூரு, பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் கடந்த 1-ந் தேதி 2 குண்டுகள் வெடித்து சிதறியது. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், சிவமொக்காவில் குண்டுகளை வெடித்து பயிற்சி பெற்ற இடத்தில் கிடைத்த சாட்சி ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு … Read more

நட்சத்திரப் பலன்கள்: மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது… பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அப்பழுக்கற்றவர் ஆனார்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர் இந்தியாவுக்கு விமானங்களை குத்தகைக்கு எடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பிரஃபுல் படேல் மீது 2017-ம் ஆண்டு சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பான விசாரணை சுமார் … Read more