தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.12) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களிலும், … Read more

வரும் தலைமுறையைக் காக்கப் புது முயற்சி: 'ரத்தினாவின் திருமணத் தகுதித் திட்டம்' அறிமுகம்

தாம்பத்திய உறவு பிரச்சினை குழந்தையின்மை காரணமாக ஏற்படும் விவாகரத்து – தற்கொலை சம்பவங்களை தடுக்க திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு தயாராகி தகுதி பெறும் திட்டத்தை கன்னியாகுமரி மாவட்டம் தனியார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அக்.31 … Read more

RSS-ல் பயிற்சி.. தேர்தல் ஆணையத்தில் பதிவி – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Thol Thirumavalavan Press Meet: RSS-ல் பயிற்சி பெற்றவர்களே இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தின் அதிகார்களாக இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார். 

‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ – அமைச்சர் ரகுபதி 

சென்னை: “வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் பின்வருமாறு: சரியான வாக்காளர் பட்டியலுடன் முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்தவும், அதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் திமுகவுக்கு எப்போதுமே மாற்றுக் … Read more

ஆசிரியர்கள் பணி நிரந்தரம்! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டம்: உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை கோயில்​கள் சார்​பில், 70 வயது பூர்த்​தி​யடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டத்​தின் தொடக்க விழா திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி சுவாமி கோயி​லில் நேற்று நடந்​தது. இதில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்கேற்று திட்​டத்தை தொடங்கி வைத்​து, 200 மூத்த தம்​ப​தி​யினருக்கு சிறப்பு செய்​தார். தொடர்ந்து பார்த்​த​சா​ரதி சுவாமி கோயில் சார்​பில் திரு​வல்​லிக்​கேணி நல்​லத்​தம்பி தெரு​வில் ரூ.2.06 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட்​டுள்ள துணை ஆணை​யர், செயல் அலு​வலர் மற்​றும் கண்​காணிப்​பாளர் குடி​யிருப்​பு​களை​யும், … Read more

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! விமான நிலையத்தில் பணியாற்ற பயிற்சி

Tamil Nadu Government : சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்கான பயிற்சியை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. இது தொட்ரபான முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.  

கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி

கல்பாக்கம்: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு … Read more

அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் – சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வெதர்மேன் கூறியுள்ளார்.  மேலும், சென்னையிலும்  மிதான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.