விடாது கொட்டும் கனமழை.. தென் மாவட்டங்கள் டார்கெட்.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Today : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, சென்னையில் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்

சென்னை: புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக … Read more

மிரட்டலால் ஏற்பட்ட விபரீதம்: தூத்துக்குடியில் காதலியை இழந்த இளைஞர் ஹேர் டை குடித்துத் தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த நிபின் இமானுவேல் என்ற இளைஞர், 8 ஆண்டுகளாகக் காதலித்த பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நடந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி!

சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம் வரை தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், தாம்பரம் ரயில் நிலை யம் வழியாக செங்கல்பட்டு, திருமால் பூர் உள்பட புறநகர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக் கப்படுகின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து மத்திய, தென் மாவட்டங் களுக்கு தினசரி … Read more

தானம் அளிக்கப்பட்ட நுரையீரல்… 21 நிமிடங்களில் கொண்டுசென்ற சென்னை மெட்ரோ – குவியும் பாராட்டு

CMRL Organ Transportation: பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டவரப்பட்ட தானம் அளிக்கப்பட்ட உடலுறுப்பை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டுசெல்வதில் சென்னை மெட்ரோ முக்கிய பங்காற்றி உள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்துவிட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த, அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு … Read more

இனி எழும்பூர் போகாதீங்க.. தென்மாவட்ட ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. வெளியான அறிவிப்பு

Egmore Railway Station:  அடுத்த வரும் நாட்களில் ரயில்களில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு தான் இந்த அறிவிப்பு. இனி வரும் நாட்களில் எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் புறப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.   

சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவர்’ பாசம் | உள்குத்து உளவாளி

லீடர் பதவியில் அமர்த்தி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. ஆனாலும் டெல்லி தலைமைக்கு அவரைப் பற்றி ஏகப்பட்ட ‘பெட்டிஷன்கள்’ குவிகிறதாம். சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவரா’ பாசம் காட்டுகிறார் என்பது தான் அதில் பல பேரின் புகைச்சலாம். ‘ஸ்ட்ராங்கான’ கட்சித் தலைவர் கொலை வழக்கில் இவரையும் விசாரிக்கப் போகிறது ’மத்திய போலீஸ்’ என்றும் சிலர் கிலி அடிக்கிறார்களாம். இவரை லீடராக வைத்திருந்தால் சூரியக் கட்சி கூட்டணியை விட்டு நகர்த்தவே முடியாது என்று யோசிக்கும் ஜூனியர் எம்பி-க்கள் சிலர், … Read more

நாளை நடப்பது யாருக்கும் தெரியாது – சரத்குமார் தத்துவம்

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் குறை கூறுகின்றனர். எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளரை சரிபார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவதாக கூறியுள்ளனர். உண்மையான வாக்காளராக இருந்தால், அந்த வீட்டுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பித்து சீர்திருத்தம் செய்வதுதானே நல்லது. தேர்தலுக்கு முன்புதானே வாக்காளர் … Read more

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: தஞ்​சாவூர் மாவட்​டம் அதி​ராம்​பட்​டினத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முஸ்​லிம்​கள் மீது போலீ​ஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்​து, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. அதி​ராம்​பட்​டினத்​தைச் சேர்ந்த சாஜி​தா, பாத்​தி​மா, இப்​ராஹீம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: முஸ்​லிம் தலை​வர்​கள், இயக்​கத்​தினர் ஆகியோர் மீதான மத்​திய அரசின் கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, அதி​ராம்​பட்​டினம் பேருந்து நிலை​யம் அருகே அமை​தி​யான முறை​யில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டத்​தில் … Read more