ராமதாஸ் – அன்புமணி இடையே விரைவில் சமாதானம்: ஜி.கே.மணி நம்பிக்கை

திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “ராமதாஸும், அன்புமணியும் 45 நிமிடங்கள் பேசினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருவரும் சந்திக்கவில்லை என்று தவறான தகவலைப் … Read more

இன்று பக்ரீத் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை … Read more

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்: 6 பேர் போட்டியின்றி தேர்வு உறுதி

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையிலும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் … Read more

சிவகாசியில் ரூ.30 லட்சம் மதிப்பில் பட்டாசு தொழிலாளி நினைவுச் சிலை திறப்பு

சிவகாசி: சிவகாசி காரனேசன் சந்திப்பில் பட்டாசுத் தொழிலாளியின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நினைவுச் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சார்பில் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பட்டாசு தொழிலாளியின் நினைவு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விருதுநகர் சாலையில் நகரின் நுழைவுப் பகுதியான காரனேசன் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை உருவாக்க ரூ.30 லட்சம் நிதி … Read more

ஞானசேகருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. மா. சுப்பிரமணியன் விளக்கம்!

Minister Ma. subramanian: குற்றவாளி ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

“பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக ‘தொகுதி மறுவரையறை’ பூச்சாண்டி” – ஸ்டாலின் மீது எல்.முருகன் சாடல்

சென்னை: “தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 2027-ல் மக்கள் தொகை … Read more

மதுரைக்கு வரும் அமித்ஷா.. விஜய் சந்திக்கிறாரா? நயினார் நாகேந்திரன் பேட்டி!

Nainar Nagendran press meet: மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தரும்போது தவெக தலைவர் விஜய் அவரை சந்திக்க வாய்ப்புள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். 

மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: காவல் துறை நடுநிலை வகிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு … Read more

2027இல் சென்சஸ் நடந்தால்… தமிழ்நாட்டுக்கு ஏன் ஆபத்து? புட்டுபுட்டு வைத்த ஸ்டாலின்

CM MK Stalin: மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என மத்திய அரசை குற்றஞ்சாட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

‘வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரும் இன்சூரன்ஸ் திட்டம்’ – புதுச்சேரி காங். வாக்குறுதி

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம் என புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் இன்று இணைந்தனர். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்என்ஆர். பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். … Read more