6 பவுன் தங்கச் சங்கிலி பரிசு கொடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! அதிர்ஷ்டம் யாருக்கு?

தஞ்சை மாவட்டத்தில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு மாவட்ட செயலாளருக்கு 6 பவுன் தங்க சங்கிலி பரிசாக கொடுப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மதுரையில் வேட்புமனு தாக்கல் அறைக்குள் கூட்டம்: காவல் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ‘டோஸ்’

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் கூடுதல் நபர்களை கூட்டமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனுமதித்ததால் அதிருப்தியடைந்த ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சங்கீதா, காவல் துறை அதிகாரிகளை நேரடியாக அழைத்து ‘டோஸ்’ விட்டதோடு மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரும் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இன்று திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய … Read more

ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட்! களநிலவரம் என்ன?

ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுப்பிய பரிந்துரையை திமுக தலைமை ஏற்கவில்லையாம்.

தந்தை சமாதியில் உறுதிமொழி ஏற்ற பின் வீரப்பன் மகள் வேட்புமனு தாக்கல் @ கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: தந்தையின் சமாதிக்கு சென்று வணங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்றும் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீரப்பனின் சமாதிக்கு வித்யாராணி, தனது … Read more

நீலகிரி: வேட்புமனு தாக்கலுக்கு லேட்டாக வந்த எல்.முருகன்! பாஜக போராட்டம், காவல்துறை தடியடி

நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக – பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்; விளவங்கோடு தொகுதியில் தாரகை போட்டி

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கட்பர்ட் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒரு தொகுதிக்கு 3 பேர் என 9 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் செல்வப்பெருந்தகை கடந்த மார்ச் 20-ம் தேதி டெல்லி சென்றார். நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக தமிழக … Read more

அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்! பரபரப்பு பின்னணி

வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்: கிருஷ்ணசாமி

ராஜபாளையம்: “தேர்தலுக்கு தேர்தல் உறுதியற்ற வாக்குறுதிகளை அளித்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தென்காசியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மதுரையில் இருந்து இன்று கார் மூலம் தென்காசி சென்றார். அவருக்கு ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்களவைத் தேர்தலில் … Read more

விருதுநகர்: ஒரே நாளில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் – பரஸ்பரம் நலம் விசாரித்த சுவாரஸ்யம்

விருதுநகர்: மக்களவைத் தேர்தல் களம் களைகட்டியுள்ள சூழலில் இன்று (மார்ச் 25) தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் வேட்புமனு தாக்கலுக்காகக் … Read more

பேராசிரியர் பணி தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு: அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை 66% உயர்த்தி அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான … Read more