1 ஆம் வகுப்பு டூ 10 ஆம் வகுப்பு : ரூ.25,000 கல்வி உதவித் தொகை – மத்திய அரசின் லேட்டஸ்ட் அப்டேட்

Central government, Scholarship 2025 : 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற … Read more

அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன? – அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம்  அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை- அமைச்சர் வாக்குமூலம் குறித்து முதல்வரின் பதில் என்ன என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.   

‘முருக பக்தர்கள் மாநாடு… கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தி’ – மதுரை திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை

மதுரை: “மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு ஓர் ஆன்மிக நிகழ்ச்சி அல்ல. மாறாக, பாஜக பரிவாரம் நாடு முழுவதும் செய்து வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியே. அவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தியே என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்,” என முருக பக்தர்கள் மாநாடு குறித்து திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முருக பக்தர் மாநாடு குறித்து … Read more

தமிழகத்தில் நாளை வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வும் மையம்!

தமிழகத்தில் இன்றுடன் கனமழை முடிவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், ரவீந்திரனுக்கு எதிரான அமலாக்கத் துறை ஆவணங்கள் போதுமானது அல்ல: ஐகோர்ட்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு … Read more

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாயவலையில் தமிழக மக்கள் சிக்கமாட்டார்கள்: செல்வப்பெருந்தகை 

சென்னை: “முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன் கடந்த காலங்களில் ஊர் ஊராக வேலை தூக்கிக் கொண்டு அலைந்தார். ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்ததோடு, பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது நயினார் நாகேந்திரன் முருகனை கையில் எடுத்திருக்கிறார். முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக விரிக்கும் மாய வலையில் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எவரும் சிக்க மாட்டார்கள்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

ஜூலையில் பூந்தமல்லி – போரூர் பாதையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை

சென்னை: சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்தில், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடத்​தில், போரூர் – பூந்​தமல்லி பைபாஸ் இடையே உயர்​மட்​டப் பாதையில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் மும்​முர​மாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில்​கள் அடுத்த மாதம் பாது​காப்பு சோதனைக்கு உட்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காக, இந்​திய ரயில்​வே​யின் ஆராய்ச்சி வடிவ​மைப்​பு​கள் மற்​றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) குழு​வினர் இங்​கு​வந்து பாது​காப்பு சோதனை மேற்​கொள்ள உள்​ளனர். இந்த … Read more

பாஸ்போர்ட்டை எளிதாக பெற நடமாடும் வேன் சேவை: கிராமப்புற மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறுவதற்காக, பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறுவதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும், தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான கே.ஜெ. ஸ்ரீனிவாசா தொடங்கி வைத்தார். விழாவுக்கு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி … Read more

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

தென்காசி மக்களவை தொகுதியில் 2019-ல் தனது விசுவாசியான தனுஷ் எம்.குமாரை நிறுத்தி எம்பி-யாக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி. தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அண்ணாச்சி, அங்கே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உண்டாக்குவதற்காக தனுஷ் எம்.குமாரை அடுத்த கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார். ஆனால், உட்கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி பலிக்காமல் போனது. இதையடுத்து தனுஷ் எம்.குமாருக்கு 2024-ல் மீண்டும் எம்பி சீட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் மனம் … Read more