“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும்” – தினகரன்

சிவகங்கை: “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்,” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் பிறந்ததினத்தை யொட்டி, இன்று (ஜூன் 10) அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் பாஜக முக்கியமான கட்சி. தமிழகத்தில் … Read more

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு – அன்புமணி ராமதாஸ்!

ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை  பெறுவதில்  ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கு  தமிழக அரசு தான் காரணமாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தனி மாவட்டம் ஆகுமா கும்பகோணம்? – ஸ்டாலின் வாக்குறுதியும், அரசு தரப்பு பதிலும்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால், 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசு விதிகளின்படி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால், மாவட்டத்தின் பரப்பளவு 2,500 ச.கி.மீ. முதல் 9,000 ச.கி.மீ. வரை … Read more

மக்களே உஷார்.. ஒரு வாரத்திற்கு கனமழை வெளுக்க போகுது! எங்கெல்லாம் தெரியுமா?

Heavy Rain Alert: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

‘திருமாவளவன் வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்’ – மத்திய அமைச்சர் எல்.முருகன்

புதுச்சேரி: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா எனத் தெரியவில்லை. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முருகன் இன்று வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடு பற்றி … Read more

அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – சீமான்!

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் – செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். 

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத … Read more

“2026 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும்” – பெ.சண்முகம்

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். 2021 தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது.” என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள், 2026 தேர்தல் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த ஊடகப் பேட்டியில் … Read more

அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! அசைவம் சாப்பிட தம்பதி கைது?

திருவண்ணாமலையில் கோவில் வளாகத்தில் அசைவம் சாப்பிட்ட தம்பதி. கோவில் முழுக்க புனித நீர் தெளிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பிராயச்சித்த பூஜை.

சென்னை | ஆட்டோவில் பயணி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஓட்டுநர்

சென்னை: பயணி தவறவிட்ட தங்க நகைகளை, ஆட்டோ ஓட்டுநர் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் சக்திவேல் (53). இவர், குடும்பத்துடன் அவர் திருப்பூர் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி இரவு பேருந்தில் சென்னைக்கு வந்தார். சாலிகிராமம் அருகே 100 அடி சாலையில் இறங்கி 3 பைகளுடன் அங்கிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி எம்எம்டிஏ காலனியில் உள்ள அவரது வீட்டினருகே இறங்கி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது … Read more