அமெரிக்க பஸ்சில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; நான்கு பேர் காயம்| Dinamalar

ஓரோவில்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில், 43 வயது பெண் உயிரிழந்தார்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கிரேஹோண்ட் என்ற இடத்தில் இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற பஸ், ஓரோவில் அருகே வந்தது. அப்போது, 21 வயது இளைஞர் ஒருவர், பயணியர் மீது திடீரென சுடத் துவங்கினார்.

இதில், 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார்; கர்ப்பிணி உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசாரைப் பார்த்து, அந்த இளைஞர் தப்பி ஓடினார். போலீசார் விரட்டிச் சென்றனர். அருகில் இருந்த வணிக வளாகத்திற்குள் புகுந்த அவர் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.