"ரெண்டும் ஒன்னுதான்".. பிரியங்கா பிரசாரம்.. சீமானைப் பார்த்து திமுக சொன்ன அதே வார்த்தை!

தமிழகத்தில் பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் ஒன்றுதான் என்று எப்படி திமுக பிரசாரம் செய்ததோ அதே பாணியில், பாஜகவும், ஆம் ஆத்மியும் ஒன்றுதான் என்று பஞ்சாபில்
பிரியங்கா காந்தி
பிரசாரம் செய்தார்.

தமிழகத்தில் தேர்தல் என்று வந்து விட்டால் போதும் நாம் தமிழர் கட்சியை குறி வைத்து திமுகவினர் கலகலப்பாக பிரசாரத்தில் குதித்து விடுவார்கள். நாம் தமிழர் கட்சிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், பாஜகவுக்கு போடும் ஒட்டு என்று திமுகவினர் பிரசாரம் செய்தனர். திமுக கூட்டணியினரும் அதே போலவே பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரம் மக்களிடையேயும் ஓரளவுக்கு எடுபட்டது.

தற்போது இதே பாணியிலான பிரசாரத்தை காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். ரூப்நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், உங்கள் முன்பு பாஜகவும், ஆம் ஆத்மியும் வந்து வாக்கு கேட்கிறார்கள். இருவருமே ஒரே ஆட்டத்தைத்தான் விளையாடுகிறார்கள். இருவரும் ஒன்றுதான். நரேந்திர மோடியையும் பாருங்கள், அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாருங்கள்.. இருவரும் எங்கிருந்து வந்தனர்.. இருவரும் ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து உதித்தவர்கள்.

குஜராத் மாடல் ஆட்சியும் சரி, டெல்லி மாடல் ஆட்சியும் சரி இரண்டுமே தோல்விதான். குஜராத் மாடலைப் பாருங்கள் – யாருக்கும் வேலை இல்லை, யாரும் பிசினஸ் செய்ய முடியவில்லை. எந்த உதவியும் யாருக்கும் கிடைக்கவில்லை. அதேபோலத்தான் டெல்லியிலும்- புதிய மருத்துவமனைகள் கிடையாது, கல்வி நிறுவனங்கள் கிடையாது. புதிய வேலைகளும் கிடையாது என்றார் பிரியங்கா காந்தி.

பஞ்சாபில் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பின்ன்னர் அது 20ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பஞ்சாப் சட்டசபையில் 117 இடங்கள் உள்ளன. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.