இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் : மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் பிப்ரவரி 15 வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு இதற்கு முன்பு அறிவித்திருந்தது.  இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், கொரோனா பெருந்தொற்று நிலைமையை ஆய்வு செய்த பின்னர், குறைந்து வரும் கொரோனா  தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முழு அளவிலான பணியாளர்களோடு அலுவலகங்கள் இன்று முதல் … Read more

யோகி ஆதித்யநாத் அரசு ஏழைகளின் கோரிக்கையை கேட்பதில்லை : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஏழை, நடுத்தர மக்களின் பேச்சைக் கேட்பதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நொய்டாவின் டூப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரும் அநீதி … Read more

பிப்-07: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரசார கூட்டங்கள் கட்டுப்பாடு தளர்வு

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொதுவெளி பிரசார பொதுக் கூட்டங்களில் 30 சதவீதம் பேரும், உள்ளரங்க பிரசாரத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேரும் பங்கேற்கலாம். … Read more

சமந்தாவுக்கு கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்

நடிகை கீர்த்தி சுரேஷும் சமந்தாவும் மகாநடி என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகவும் மாறிவிட்டனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து சமந்தாவுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது படப்பிடிப்பு தளத்தில் ஒரு அழகிய குட்டி பெண்ணை சந்தித்து, அவரிடம் உனக்கு வருங்காலத்தில் யார் போல ஆவதற்கு விருப்பம் என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை சமந்தாவை போல … Read more

ஒரே டோஸ் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!!

புதுடெல்லி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு  ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 9வது கொரோனா தடுப்பூசி ஆகும். முன்னதாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதன் … Read more

1000ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள … Read more

லதா மங்கேஷ்கரின் இனிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்; ஹமீத் கர்சாய்

காபூல், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய … Read more

130 பதிப்பகங்கள் தயார்… அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் புத்தக கண்காட்சி!

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்காக மக்கள் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக விழாவின் தேதிகள் ஒத்திவைக்கப்படுவது நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் வேதனையளிக்கிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இணையதளத்தில் புத்தக வலைப்பக்கம் தொடங்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இந்த ஆண்டின் சென்னை புத்தக கண்காட்சி முடிந்தவுடன் ஆன்லைன் புத்தக வலைப்பக்கத்தை தொடங்க உள்ளதாக கூறுகின்றனர்.  இதைப்பற்றி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பேசினோம், அப்போது BAPASIயின் … Read more

மருத்துவமனைக்கு சென்ற சிறுமி.. தாய் தந்தையர் கைது..! அரியலூரில் பகீர் சம்பவம்.!

அரியலூர் மாவட்டத்தில் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் சிறுமி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். எனவே மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது மருத்துவருக்கு 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். சிறுமியிடம் போலீசார் விசாரணை … Read more