1000 வது போட்டியில் இந்திய அணி வெற்றி <!– 1000 வது போட்டியில் இந்திய அணி வெற்றி –>

இந்திய கிரிக்கெட் அணி, தனது ஆயிரமாவது போட்டியில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால், மேற்கு இந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் … Read more

நான் என்னடா பாவம் பண்ணேன்! வித்தியாசமான முறையில் ரன் அவுட்டான ரிஷப் பண்ட! சோகமாக வெளியேறிய காட்சி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட வித்தியாசமான முறையில் அவுட்டானார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக ரிஷப் பண்டக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், சோகமடைந்த அவர் முகத்தில் கடுமையான வருத்தத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இவை அனைத்தும் இந்திய இன்னிங்ஸின் 18-வது ஓவரின் மூன்றாவது பந்தில் நடந்தது. கடந்த சில போட்டிகளில் 4-வது இடத்தில் அவர் களமிறங்கினார். சிலர் அந்த இடம் அவருக்கு … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு : நாளை மகாராஷ்டிராவில்  பொது விடுமுறை அறிவிப்பு

மும்பை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணத்தை ஒட்டி நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், … Read more

ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதி வேகமாக 5000 ரன்கள் – சாதனை படைத்தார் கோலி

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் கோலி 4 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 5 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி நேற்று படைத்தார். ஒருநாள் போட்டிகளில் தனது 249வது இன்னிங்ஸை கோலி விளையாடினார். சொந்த மண்ணில் அவருக்கு இது 96வது  இன்னிங்ஸ். இதில் 5000 ரன்களை … Read more

பஞ்சாப் முதல் மந்திரி வேட்பாளர் சரண்ஜித் சன்னி – ராகுல் காந்தி அறிவிப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது.  காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது.   இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி … Read more

இந்தோனேஷியாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா : இந்தோனேசியாவின் யோககர்த்தா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு அலுவலக செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்துள்ளார். பந்துல் மாவட்டத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு தாழ்வான சாலை வழியாகச் சென்றபோது, ​​​​ஓட்டுநரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து வலதுபுறம் இருந்த உயரமான தரையில் மோதியதாக  மாவட்ட காவல்துறைத் தலைவர் இஹ்சான் கூறியுள்ளார்.  விபத்துக்குள்ளான பேருந்தில் மொத்தம் 40 … Read more

மண்டியா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேர் வெட்டி படுகொலை: பணத்துக்காக கொலை நடந்ததா? போலீசார் விசாரணை

மண்டியா: மண்டியா மாவட்டத்தில் குஜராத் மாநிலத்தை குழந்தைகள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கங்காராம், துணி வியாபாரம் செய்து வருகிறார். மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் தாலுகாவிலுள்ள கேஆர்எஸ் பஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்துள்ளார். துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திற்கு கங்காராம் மற்றும் அவரின் சகோதரர் செல்வது வழக்கமாகும். கடந்த 3 நாள் முன்பு கங்காராம், ஆந்திராவுக்கு … Read more

இன்று மாலை வெளியாகிறது வேட்பாளர்களின் இறுதி பட்டியல்! : சுயேச்சைகளை 'வாபஸ்' பெற வைக்க தீவிர முயற்சி; 3 மாநகராட்சிகளில் சூடு பிடித்தது உள்ளாட்சி தேர்தல்

விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Dinamalar

மும்பை-‘இசைக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல்’ என, வர்ணிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று காலமானார். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும், நாடு முழுதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம் … Read more

75வது நாளில் 'மாநாடு', ஆனாலும், தயாரிப்பாளர் வருத்தம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம். இன்றுடன் இப்படம் வெளிவந்து 75 நாட்கள் ஆகிறது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் மாலைக் காட்சியாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று படம் 75வது நாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். கடந்த சில … Read more