இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி.. பக்தி பரவசத்துடன் கிரிவலம் செல்லும் பக்தர்கள்..!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு குறைந்ததால் மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்கள், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற தமிழக அரசின் நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.