ஷிவமொகா : ”வீரசைவம் — லிங்காயத் சமுதாயங்களை பிரித்தாகிவிட்டது. இப்போது மடாதிபதிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முயற்சிக்கிறார்,” என கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா சாடினார்.ஷிவமொகாவில், அவர் நேற்று கூறியதாவது:சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் மடாதிபதிகள். ஆனால் சிறிய சுவாமிஜி, பெரிய சுவாமிஜி என கூறி, இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த, சித்தராமையா முயற்சிக்கிறார்.
காங்கிரசின் எந்த தலைவரும், சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசவில்லை. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியை இழந்தும், சாமுண்டீஸ்வரியில் தோற்றும், இவருக்கு புத்தி வரவில்லை.அடுத்த தேர்தலில் போட்டியிட இவரிடம் தொகுதிகளே இல்லை. ஜமிர் அகமது கானின், சாம்ராஜ்பேட்டையை தவிர, வேறெந்த தொகுதியும் இல்லை.அத்தொகுதியில் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், ஹிந்துக்களுக்கு எதிராக சித்தராமையா பேசுகிறார். இவருக்கு மக்களே பாடம் புகட்டுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஷிவமொகா : ”வீரசைவம் — லிங்காயத் சமுதாயங்களை பிரித்தாகிவிட்டது. இப்போது மடாதிபதிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முயற்சிக்கிறார்,” என கிராம
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.