வங்கியில் பணம் எடுத்து வந்தவரை பின் தொடர்ந்து சென்று மர்ம நபர்கள் கைவரிசை

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வங்கியில் ஒருவர் எடுத்த பணத்தை, மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து கொள்ளையடுத்து சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அய்யனாரப்பன், பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில் கடந்த 30 ஆம் தேதி காலாப்பட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று 1.50 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், வீடு திரும்பிக்கொண்டிருந்த அய்யனாரப்பன் பைக்கை நிறுத்திவிட்டு சாலையோர இளநீர் கடைக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் அவரது பைக்கில் இருந்த பெட்டியை உடைத்து 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.