இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த டீயை ஒருவாட்டி குடிச்சு பாருங்க..! சளி இருமல் உங்கள் கிட்ட கூட நெருங்காது


பொதுவாக காலநிலை மாற்றத்தால் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் என்று பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து அதிக தொல்லைகளை தரும்.

இந்த சளி இருமல் பிரச்சனைகளை நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிக எளிதில் சரி செய்துவிட முடியும்.

அதற்கு ஒரு சூப்பரான மருத்துவ குணங்கள் நிறைந்த டீ உள்ளது. தற்போது அதனை எப்படி எளியமுறையில் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம். 

தேவையானவை

  • இஞ்சி – சிறிய துண்டு
  • வரமல்லி – 1 ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • புதினா இலை அல்லது துளசி இலைகள் – 3

செய்முறை

  • இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்‌.
  • உங்களுடைய வீட்டில் சிறிய உரல் இருந்தால் அதிலும் கூட, போட்டு இடுத்து எடுத்துக் கொள்ளலாம்.
  • அடுத்தபடியாக டீ போடும் பாத்திரத்தில், 1 கப் அளவு தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

  • அது நன்றாக கொதித்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, 2 ஸ்பூன் அளவு டீத்தூள், 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கொதிக்கவிடுங்கள்.

  • கப் அளவு தண்ணீரை, 1/2 கப் அளவு தண்ணீராகும் வரை சுண்ட விட வேண்டும். இந்த கசாயத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். (கசாயமும் சூடாக இருக்க வேண்டும் பாலும் சூடாக இருக்க வேண்டும்.)

  • அடுத்தபடியாக காய்ச்சிய 1 1/2 கப் அளவு சூடான பாலை, கசாய தண்ணீரோடு சேர்த்து நன்றாக 2 முறை நுறை வரும் வரை தூக்கி ஆற்ற வேண்டும். (பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள்.)

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.