வாஷிங்டன்:உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 59 நுழைந்துள்ளார்.
துறைமுகம் சுரங்கம் பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்தாண்டில் மட்டும் 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து இவரின் மொத்த சொத்து 3.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக அவர் உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் ‘டெஸ்லா’ குழுமத் தலைவர் எலன் மஸ்க் இரண்டாவது இடத்தில் அமேசான் குழுமத் தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளனர்.கடந்த பிப்ரவரியில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெருங்கோடீஸ்வரர் என்ற சிறப்பை கவுதம் அதானி பெற்றார்.
தற்போது உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:உலகின் ‘டாப் 10’ கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 59 நுழைந்துள்ளார்.துறைமுகம் சுரங்கம் பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.