தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய(04) கொரோனா வைரசு தொற்று குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 20 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரiசு தொற்றுக்குள்ளான 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 18-வது நாளாக இன்று (04) கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.