
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் பல்வேறு நிறங்களில் பூத்துக்குலுங்கும் பால்சம் மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
கோடைக்காலம் தொடங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளை கவரும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் நாற்று நடவு செய்யப்பட்டு, பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தமிழகம் மாளிகையில் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்த நிலையில், அங்குள்ள கண்ணாடி மாளிகையில் வண்ண வண்ண பால்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.