பிரான்ஸ் அதிபர் தேர்தல் : ஓட்டுப்பதிவு மந்தம்| Dinamalar

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரோனின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு வரும், 24ல் நடக்கிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரான மரைன் லீ பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு இரவு 8:00 மணி வரை நடந்தது. நேற்று மதிய நிலவரப்படி 25.5 சதவீத ஓட்டுகள் பதிவானது. இது 2017ல் பதிவான ஓட்டுகளை விட குறைவு.’ஓட்டுப்பதிவு சதவீதம் குறையும்பட்சத்தில், அது இமானுவேல் மேக்ரானுக்கு பாதகமாக அமையும்’ என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.