இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிக்குது.. கவனிச்சுட்டுதான் இருக்கோம்.. அமெரிக்கா!

இந்தியாவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து அமரிக்கா கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில்,
இந்தியா

அமெரிக்கா
இடையிலான அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த சந்திப்புக்குப் பிறகு அனைவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதுதான் இப்படிக் கூறினார் பிளிங்கன். இந்தியாவுக்கு, அமெரிக்கா மிக மிக அரிதாகவே நேரடியான எச்சரிக்கை விடுக்கும். அப்படிப்பட்ட எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

“அண்ணன் வந்துட்டார்”… போஸ்டர் ஒட்டிய ஏபிவிபி.. “ஒழுங்கா இருக்கணும்”.. சுளுக்கெடுத்த சுப்ரீம் கோர்ட்!

குறிப்பாக உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவுடன் தொடர்ந்து இந்தியா நெருக்கமாக இருப்பதும், தனது பேச்சைக் கேட்க இந்தியா மறுப்பதும் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை அது வைத்துள்ளது.

பிளிங்கன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறுகையில், மனித உரிமைகள் தொடர்பான இரு தரப்புக் கருத்துக்களையும் இரு நாடுகளும் தொடர்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் நடந்துள்ள சில மனித உரிமை மீறல் சம்பவங்களையும், இதுதொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறது. அரசு, காவல்துறை, சிறை அதிகாரிகள் தொடர்புடைய
மனித உரிமை மீறல்கள்
அதிகரிப்பது கவலை தருகிறது என்று பிளிங்கன் கூறினார்.

இவருக்குப் பிறகு பேசிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோர் பிளிங்கன் பேசியது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அன்று முள்ளிவாய்க்கால்.. இன்று காலிமுகம்.. பற்றி எரியும் இலங்கை.. சிக்கலில் ராஜபக்சே!

சமீபத்தில்தான் அமெரிக்கப் பிரதிநிதி இல்ஹான் ஓமர், இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார். அவரை செயல்பட வைப்பதற்கு அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். இவர் அதிபர் பிடனின் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக கர்நாடகாவில் முஸ்லீம்களைக் குறி வைத்து பல சம்பவங்கள் அடுத்தடுத்து கிளம்பி வருகின்றன. முதலில் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்துக் கோவில்கள் அருகே
முஸ்லீம்கள்
கடை வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹலால் இறைச்சிக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்தே அமெரிக்கா பேச ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.