பூஸ்டர் டோஸ் பெற ஆர்வமில்லை! அலட்சியம் வேண்டாமென சுகாதாரத் துறை வேண்டுகோள்| Dinamalar

பெங்களூரு:நகரின் சில தனியார் மருத்துவமனைகள், கொரோனா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி கட்டணத்தை குறைத்தும், தடுப்பூசி பெற மக்கள் முன்வரவில்லை.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதை பெறும்படி, சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
தனியார் மருத்துவமனைகளில், பூஸ்டர் டோஸ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரின் சில மருத்துவமனைகள், அதிக கட்டணம் வசூலிக்கின்றன. சில மருத்துவமனைகள், 386 ரூபாய்க்கு பூஸ்டர் டோஸ் போடுகின்றன.
ஆனால் அதை பெறுவதற்கு, மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் அசோசியேஷன் செயலர் ராஜசேகர் கூறியதாவது:மாநிலத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 18 – 59 வயது வரையிலானவர்கள் ஊசி போடலாம். ஆனால், இதுவரை, 2,218 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர். கட்டணத்தை குறைத்தும் கூட, மக்கள் முன் வரவில்லை.
தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஊசிகளின் விலையை, மருந்து நிறுவனங்கள் குறைத்து உள்ளன.பழைய விலைக்கு தடுப்பூசிகளை வாங்கியிருந்த மருத்துவமனைகள், மக்களுக்கு போடும் தடுப்பூசி கட்டணத்தை குறைக்கவில்லை. சேமிப்பு காலியானதும், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.