லண்டன் : பிரிட்டனில் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பணவீக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச்சில், பிரிட்டனில் பணவீக்கம், 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, பிப்ரவரியில், 6.2 சதவீதமாக இருந்தது. 1992ம் ஆண்டுக்குப் பின், பிரிட்டனில் இந்த அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதற்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு தான் காரணம்.இத்துடன், வரி அதிகரிப்பாலும், மக்களின் வாழ்க்கைத் தரம், 1950களின் நிலைக்கு இறங்கி விட்டதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில், கடந்த ஓராண்டில் இயற்கை எரிவாயு விலை, 28 சதவீதம் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், 19 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளது.நடப்பு ஏப்ரலில், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் விலை, 54 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விலைவாசி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
லண்டன் : பிரிட்டனில் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பணவீக்கம் அதிகரித்துள்ளது.கடந்த மார்ச்சில், பிரிட்டனில் பணவீக்கம், 7 சதவீதமாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.